Skip to main content

12 மணி நேரத்திற்கும் அதிகமான பணிச்சுமையால் மன அழுத்தம்-திணறும் காவல்துறை!

Published on 15/05/2021 | Edited on 15/05/2021

 

Stress due to workload of more than 12 hours - suffocating police

 

கரோனா நோய் தொற்றால் எத்தனை முன்களப் பணியாளர்கள் பணியாற்றினாலும், அவர்கள் ஒவ்வொருவருடைய சேவையும் பலரது உயிரை காப்பாற்ற உதவுகிறது. அதன் வகையில் காவல்துறையும் தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் இந்த கரோனோ காலத்தில் தருகிறது. இருப்பினும் அவா்களும் மனிதா்கள் என்பதால் 12 மணி நேரத்திற்கும் அதிகமான பணி சுமையும், அதனால் மன அழுத்தமும் அதிகரித்து வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர். 

 

அதிலும் பெண் காவலர்களின் நிலை மிகவும் மோசமாகவே உள்ளது. 24 மணி நேரத்தில் 3 பிரிவாக பிரித்து சுழற்சி முறையில் பணி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இரண்டு பிரிவாக பிரித்து 2 சுழற்சி முறை தான் என்பதால் பணி நேரம் அதிகரிப்பதோடு, உடல்சோர்வு, மன அழுத்தம் அதிகரித்து வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

 

3 பிரிவாக பணி சுழற்சியை பிரித்தால் பணிசுமை குறையும் என்றும், நகரம் முழுவதும் 100க்கும் அதிகமான இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைத்து வாகன ஓட்டிகளை கண்காணித்து அவர்களுக்கு அறிவுரை கூறி, பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி வருகிறோம். மேலும் தொடர்ந்து விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றும் புலம்புகின்றனர்.

 

மேலும் காவலர்கள் பற்றாக்குறையாக உள்ளது. அதோடு பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே இந்த பற்றாக்குறைகளை சமாளிக்க அதிகாரிகளும் பணியில் இருப்பவர்கள் மீது அதிக அளவில் பணி சுமையை சுமத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை சமாளிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தற்போது புதிய ஊரடங்கு விதிமுறைகள் செயல்படுத்தபட்டுள்ள நிலையில், கட்டாயம் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். புதிய ஊரடங்கு செயல்பட்டுப்பட்ட நேற்று ஒருநாள் மட்டும் சுமார் 800க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே காவல்துறையின் நிலையையும் சற்று புரிந்து கொண்டு அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தினால், மன அழுத்தம் இல்லாமல் பணியாற்றிட முடியும் என்றும், ஓய்வு என்பது அவசியம் தேவை, கொஞ்ச நேர ஓய்வு இல்லாமல் தொடர்ந்து பணியாற்றினால் எங்களுடைய உடல்நிலையும் மோசமடையும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.