Skip to main content

வெறிச்சோடுகிறது தமிழகத்து வீதிகள்... 

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

மனித இனத்திற்கு சவாலாய் தனது அபாயத்தை காட்டி அச்சுருத்தி வரும் கரோனா வைரஸால் உலகமே முடங்கிப் போய் உள்ளது. அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இத்தாலியின் வீதிகள் மட்டும் வெறிச்சோடவில்லை. தமிழகத்தின் வீதிகளும் அதே நிலைக்கு போகிறது. ஒரு எடுத்துக்காட்டாக,

 

The streets of Tamil Nadu ...


ஈரோட்டில் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு பகுதி என்றால் அது நேதாஜி தினசரி மார்க்கெட் அமைந்துள்ள ஆர்கேவி ரோடு தான். அதிகாலை 3 மணி முதல் இரவு பதினோரு மணி வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்வார்கள் .ஒரு நாளைக்கு 2 லட்சம் பேர் இந்தப்பகுதியில் வருவதும் போவதுமாக இருப்பார்கள். சிறிய ஜவுளிக்கடை முதல் மிகப் பெரிய ஜவுளி கடைகள், நகைக் கடைகள் மற்றும் காய்கறி சந்தை என அனைத்து பொருட்களும் இங்கு தான் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பொருட்களை வாங்குவதற்காக தான் ஈரோடு நகர் மட்டுமில்லாமல் ஈரோட்டைச் சுற்றியுள்ள முப்பது நாற்பது கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள மக்களும் இங்கு வந்து தினசரி பொருட்களை வாங்கிச் செல்வார்கள். அப்படிப்பட்ட இந்த ஆர்கேவி ரோடு இன்று காலை மற்றும் மாலை மிகவும் வெறிச்சோடி கிடந்தது.

 

The streets of Tamil Nadu ...


அங்கொன்றும் இங்கொன்றுமாக மனிதர்கள் நடமாட்டம் இருந்தது. நேதாஜி தினசரி சந்தையில் காய்கறி கடைகள் திறந்திருந்தன ஆனால் மக்கள் யாரும் வரவில்லை. இன்று அதிகாலையில் பலர் காய்கறி வாங்கி சென்றனர். அதன் பிறகு மாலை வரை வெறிச்சோடிக் கிடந்தது. ஏதோ ஒருவித மயான அமைதிபோல் இந்த விதிகள் காட்டியது. இப்படித்தான் தமிழகத்தின் பெரு நகரங்கள் முதல் சிறு நகரங்கள் வரை மனித நடமாட்டமற்ற பகுதியாக அந்த வீதிகள் மாறிவருவது சற்று வேதனையாகத்தான் உள்ளது.     

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.