Skip to main content

'ப்ளட் ஆர்ட்' வரைவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - அமைச்சர் மா.சு. எச்சரிக்கை  

Published on 29/12/2022 | Edited on 29/12/2022

 

Stop drawing 'Blood Art' - Minister M. Su warns

 

ஓவியம் என்பது எந்த காலகட்டத்திலும் மதிப்புமிக்க வரைகலை என்ற போதிலும் மாடர்ன் உலகத்தில் அவற்றின் பரிமாணங்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது.  அண்மைக்காலமாக இரத்தத்தைக் கொண்டு ஓவியங்கள் வரைவது என்பது ட்ரெண்டாகி வந்தது. குறிப்பிட்ட நபரின் விருப்பத்திற்கு இணங்க அவரது உடலில் இருந்து தேவையான அளவு ரத்தம் எடுக்கப்பட்டு அதனைக் கொண்டு அவர்களுக்கு பிடித்தமான நபரை ஓவியமாக வரைந்து அதனை பரிசு பொருளாகக் கொடுப்பது என்பது அண்மைக்காலமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது.

 

இந்நிலையில், உயிர் காக்கும் விலைமதிப்பற்ற ரத்தத்தை வைத்து ஓவியங்கள் வரைவது என்பது, கடுமையான தண்டனைக்குரியது என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. அண்மைக்காலமாகவே இதுதொடர்பான புகார்கள் தமிழக சுகாதாரத்துறைக்கு வந்தது. சில நபர்கள் இது தொடர்பாக 'ப்ளட் ஆர்ட்' என்ற தலைப்பில் நிறுவனங்களை ஆரம்பித்து நடத்தி வந்தது தெரியவந்தது. குறிப்பாக சென்னை தியாகராய நகரில் 'தி பிளட் ஆர்ட்' என்ற பெயரில் வரைகலைக்கூடம் செயல்பட்டு வந்தது.

 

dmk

 

தொடர் புகார்களை அடுத்து அந்த வரைகலைக் கூடத்திற்கு சென்ற தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரத்தத்தை எடுப்பதற்கு பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்ததோடு அங்கிருந்து ரத்த ஓவியங்களையும் பறிமுதல் செய்தனர். இனிமேல் ரத்த ஓவியங்களை வரையக்கூடாது எனவும் எச்சரித்துவிட்டு சென்றனர்.

 

செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், பதிலளித்த அவர், '''பிளட் ஆர்ட்’ என்கிற ரத்த ஓவியம் வரைவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். பிளட் ஆர்ட் நிறுவனங்கள் மீது இன்று முதல் தமிழகத்தில் தடை விதிக்கப்படுகிறது. இதை யாராவது மீறி ரத்த ஓவியங்கள் வரைந்தாலும், அதற்கான கூடங்களைத் திறந்து வைத்திருந்தாலும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். அவைகளுக்கு சீல் வைக்கப்படும்'' என எச்சரித்தார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

'பிரதமர் சொல்வது அதிசயமான ஒன்றாக உள்ளது' - அமைச்சர் மா.சு பேட்டி

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
 'What the Prime Minister is saying is something amazing' - Minister Ma.su interview

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில் கச்சத்தீவு மீட்பு குறித்த மோதல்கள் பாஜகவிற்கு திமுகவிற்கும் இடையே ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதாகவும், அப்பொழுது  முதல்வராக இருந்த கலைஞர் எந்தக் கேள்வி கேட்கவில்லை என பிரதமர் இன்று குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இது குறித்த கேள்விக்கு, ''இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் ஏராளமான முறை அமைச்சர் துரைமுருகன் மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறார். கச்சத்தீவு விவகாரம் வரும் போதெல்லாம் தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், அன்று என்ன நடந்தது; அண்ணா கண்டன கூட்டங்களை நடத்தியது; கலைஞர், இந்திரா காந்தி அம்மையாருக்கு எதிராக நடத்திய போராட்டங்கள்; சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இது பற்றி நிறைய விஷயங்களை தெரிவித்துள்ளார். ஆனால் இதை எல்லாம் எதையுமே தெரிந்து கொள்ளாமல் ஒரு பிரதமர் இந்த மாதிரி சொல்லி இருக்கிறார் என்பது ஒரு அதிசயமான ஒன்றாக இருக்கிறது. அப்படி இருந்தால் இந்த பத்தாண்டு காலம் கச்சத்தீவு மீட்புக்கு நரேந்திர மோடி என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையும் அவர்கள் விலக்கி இருந்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.