Skip to main content

இறந்தவரை நடிக்காதே, நடிக்காதே என்ற போலிஸ்...

Published on 23/05/2018 | Edited on 23/05/2018
sterlite

 

 

 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மட்டும் 11 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். மீண்டும் இன்று துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி நடத்தப்பட்டது. இதில் காளியப்பன் என்ற இளைஞர் உயிரிழந்தார். உயிரிழந்த அந்த உடல் நடுரோட்டில் கிடந்தது, அதைச்சுற்றி பத்து காவலர்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் அவன் நடிக்குறான், நடிக்குறான் சார் என்று கூற இன்னொரு காவலர் நடிக்காத போ என்று கூறுகிறார். அடித்துக்கொன்றும்விட்டு, நடிக்கிறான் என்றும் சொல்கிறீர்களா என பலரும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

சார்ந்த செய்திகள்