Skip to main content

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: 6 பேரின் உடல்களை விரைவில் பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் உத்தரவு

Published on 05/06/2018 | Edited on 05/06/2018
Sterlite protest


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியாகி மருத்துவமனையில் பாதுகாக்கப்படும் 6 பேரின் உடல்களை ஜிப்மர் மருத்துவரை கொண்ட குழு மூலம் விரைவில் பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியாகி பாதுகாக்கபடும் உடல்களுக்கு உடற்கூறு ஆய்வு செய்யும் குழுவில் தங்கள் தரப்பில் பரிந்துரைக்கும் மருத்துவரை சேர்க்கக்கோரி வழக்கறிஞர்கள் ஜிம்ராஜ் மில்ட்டன், பார்வேந்தன், பாவேந்தன், நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட ஆறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. 

 

 

 

இந்நிலையில் மில்ட்டன் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வில் நேற்று ஆஜராகி 7 பேரின் மறு உடற்கூறு ஆய்வின்போது, சென்னை உயர் நீதிமன்ற பரிந்துரைப்படி டெல்லி எய்ம்ஸ் அல்லது திருவனந்தபுரம் அரசு மருத்துவரை ஆலோசிக்காமல் ஜிப்மர் மருத்துவரை மட்டுமே தேர்வு செய்ததால், மீதமுள்ள 6 உடல்களை உடற்கூறு ஆய்வு செய்வதில் தங்கள் மருத்துவரையும், வழக்கறிஞரையும், உறவினரையும் அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். 
 

இந்த நிலையில் இன்று தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி ப்பி.ட்டி.ஆஷா ஆகியோர் விசாரித்தபோது, வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி, 6 பேரின் உடலை பிரதே பரிசோதனையின் போது திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்துவர் இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். 
 

 

 

இதற்கு ஆட்சேபனை தெரிவித்து அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவில் எய்ம்ஸ் அல்லது ஜிப்மர் அல்லது திருவனந்தபுரம் அரசு மருத்துவர் உடன் இருக்க வேண்டும் என இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு உத்தரவிட்டதன், அடிப்படையில் தான் ஜிப்மர் மருத்துவமனை மருந்தவரை தேர்ந்து எடுத்தாகவும் தெரிவித்தார். 
 

அப்போது, விடுமுறை கால அமர்வு பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்ய மறுத்த நீதிபதிகள், மீதமுள்ள 6 பேரின் உடல்களை எவ்வளவு விரைவாக உடற்கூறு ஆய்வு செய்ய முடியுமோ விரைவில் முடித்து, உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டனர். 
 

அப்போது, தன்னுடைய உறவினர் மரணம் அடைந்தபோது பிணவறையிலிருந்து அந்த உடலை வாங்குவது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு தெரியும் என்று தெரிவித்த தலைமை நீதிபதி, அதன் அடிப்படையில் தான் இந்த ஆறு பேரின் உடலை உடனடியாக பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
 

மேலும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் என்பது துரதிஷ்டவசமானது தான் என்றும், இரு தரப்பு கருத்தையும் கேட்கும் வகையில் சுதந்திரமான விசாரணை என்பது தேவை என்பது மறுக்க முடியாது என்றும், ஆனால் தற்போது உடற்கூறு ஆய்வு தான் பிரதானமான ஒன்று என தெரிவித்தார். 
 

 

 

மேலும் பிரேத பரிசோதனை கோரி உறவினர்கள் அரசு நிர்வாகத்தை அணுகி கடிதம் கொடுத்தவுடன் பிரேத பரிசோதனை செய்து கொடுக்க வேண்டும் , கடிதம் கொடுக்கபடாத உடல்களுக்கு ஏற்கனவே வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில் பிரேதப்பரிசோதனை செய்யலாம் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டு, வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாகத் திறக்க அனுமதிக்க முடியாது” - உச்சநீதிமன்றம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
 Supreme Court says Sterlite plant cannot be allowed to open immediately

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால், அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 14ஆம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘ஸ்டெர்லைட் ஆலை, அரசின் உத்தரவையும், நீதிமன்ற உத்தரவையும் மதிப்பதும் இல்லை. அமல்படுத்துவதும் இல்லை. நீதிமன்ற உத்தரவுகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் பலமுறை மீறியுள்ளது. விதி மீறல்களில் ஈடுபட்டதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது’ என்று வாதிடப்பட்டது.

இதனையடுத்து உச்சநீதிமன்றம் கூறியதாவது, ‘ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது. அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒப்புக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையை திறப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக முடிவு செய்யலாம்’ என்று தெரிவித்தது. 

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு இன்று (21-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் தரப்பில் கூறியதாவது ‘நிபுணர் குழுவை விரைந்து அமைக்க வேண்டும். மேலும் ஒரு மாதத்தில் நிபுணர் குழு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.

சாமானிய மக்கள் நேரடியாக நீதிமன்றம் வர முடியாது என்றாலும் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது. அதே சமயம், தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும், சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை தவறு என கூற முடியாது. அதனால், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது” என்று கூறி உத்தரவிட்டார். 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்... ரஜினிகாந்த் வழக்கறிஞர்கள் ஆணையத்தில் விளக்கம்

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

கடந்த 2018  ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Explanation at Rajinikanth Lawyers Commission

 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக பல பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரும் நேரில் ஆஜராக தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. சீமான் கடந்த மாதம் ஆஜரான நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராவர் என எதிர்பாக்கப்பட்டது. இந்நிலையில் அவர் நேரில் ஆஜராகாமல் நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர்கள் தற்போது ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் இறுதியில் காயமடைந்த மக்களை நேரில் பார்க்க சென்ற ரஜினிகாந்த் தூத்துக்குடி விமானநிலைத்தில் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக பேசியிருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அவரிடம் இதுதொடர்பாக நேரில் விசாரணை ஆணையம் விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவரது வழக்கறிஞர் இளம்பாரதி உட்பட 3  வழக்கறிஞர்கள் ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணையத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு வேண்டும் என்ற ரஜினியின் கோரிக்கையை விசாரணை ஆணையம் ஏற்றுகொண்டது. அதேபோல் ரஜினியிடம் கேட்கவேண்டிய கேள்விகள் சீலிடப்பட்ட கவரில் அவரது வழக்கறிஞர்களிடம் கொடுக்கப்பட்டது.