ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் தூத்துக்குடி நகரம் போர்க்களம் ஆனது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலி ஆனார்கள். மேலும் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைடியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் இன்று காலை சந்திக்க சென்றார். அப்போது மருத்துவமனைக்கு வெளியே பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் உறவினர்கள் கூடியிருந்தனர். அவர்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். மருத்துவமனையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Advertisment