Advertisment

ஸ்டெர்லைட் விவகாரம் - அதிகாரி நசுமுதீனின் கருத்துக்களை கேட்கலாம் எனவும் உத்தரவு

st

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ள கமிட்டி விசாரணையின் போது கமிட்டி விரும்பினால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரி நசுமுதீனின் கருத்துக்களை கேட்கலாம் எனவும் உயர்நீ்தி மன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisment

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நசுமுதீன் பணியிட மாற்றத்தை ரத்து செய்யக் கோரி நாகர்கோவிலை சேர்ந்த ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி தேவசகாயம் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ் - என்.சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது, அப்போது தமிழக அரசு தரப்பில்,ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் கமிட்டி அமைத்துள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதாகவும் அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்த நீதிபதிகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தனர்.

Advertisment

Sterlite plant
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe