Skip to main content

“மதுவுக்கு அடிமையான முதியவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை” - அமைச்சர் முத்துசாமி பேட்டி

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

nn

 

'மதுவுக்கு அடிமையான முதியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி பேசுகையில், ''வழக்கம்போல் திறக்கப்படும் நேரத்திலேயே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும். டெட்ரோ பேக்கில் மதுபானம் விற்பனை செய்வது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. மதுவுக்கு அடிமையான முதியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனித்தனியாக வாகனங்கள் போட்டு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதுவால் என்ன பாதிப்பு வருகிறது என்பதை படம் எடுத்து வைத்திருக்கிறார்கள். அதை எல்லாம் டாஸ்மாக் கடை முன்பே சென்று போட்டுக் காண்பித்து விழிப்புணர்வு உருவாக்குவதற்கான நடவடிக்கையை தனியாக எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

 

டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும் எனச் சொல்லி நடவடிக்கை எடுத்து அந்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. எங்கெங்கெல்லாம் கண்காணிப்பு கேமரா இல்லையோ அதை உடனடியாக அமைத்து நேரடியாக சென்னையிலிருந்து அதை கண்காணிக்கலாம். அந்த அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. லோக்கல் காவல்துறை கண்காணிப்பதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே அதற்கு அடுத்தடுத்த அதிகாரிகள் அங்கங்கே கண்காணிக்கலாம்.

 

நம்மிடம் இருக்கக்கூடிய கடைகளின் அளவு மிகவும் குறைச்சல். புதிய தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை விட்டுள்ளார். அதில் புதியதாக மாற்றுகின்ற பொழுது 500 சதுர அடிக்கு மேல் இருக்கும் கடைகள் தான் வேண்டும். அங்கு கழிவறை வசதி இருக்க வேண்டும். அந்த அடிப்படை வசதி கூட இல்லாமல்தான் அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வசதியோடுதான் கடை வைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அந்த மாதிரி வருகின்ற பொழுது பில் போடுவதற்கு தனியாக இடம் வேண்டும். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் சேல்ஸ்மேன் நின்று கொண்டுதான் வேலை செய்கிறார். அவர் திரும்பக் கூட இடமில்லாமல் இருக்கிறது.

 

இதெல்லாம் இத்தனை வருஷமாக இருக்கிறது. இந்த நிலைமையில்தான் அவர்கள் வேலை செய்து வருகிறார்கள். அந்த இடத்தில் போய் பில் போட வேண்டும் என்றால் அதற்கு தனியாக இடம் வேண்டும். அங்கே ஒரு கியூ நிற்கும். அதன் பிறகு இங்கு வந்து கொடுத்துவிட்டு வாங்க வேண்டும். இதற்கு தகுந்தாற்போல் உள்ள இடத்தில் பில்லிங் சிஸ்டத்தை கொண்டுவரச் சொல்லி நடவடிக்கை எடுத்திருக்கிறோம். கேரளாவில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் கேரளாவில் ஒவ்வொரு கடையும் ஆயிரம் ஸ்கொயர் ஃபீட் இருக்கும். அதனால் அவர்களுக்கு சுலபமாக இருக்கும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.