Skip to main content

சேலம் ஸ்டீல் பிளான்ட் தனியார்மயம்: சமூகநீதிக்கு சமாதி கட்டும் பாஜக!

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பது குறித்து, புலி வருது கதையாகச் சொல்லிக்கொண்டிருந்த நடுவண் பாஜக அரசு, இந்தமுறை உலகளாவிய ஒப்பந்தம் விடுவதற்கான பகிரங்க அறிவிப்பை வெளியிட்டு, தொழிலாளர்களின் வயிற்றில் ஓங்கி அடித்திருக்கிறது. ஜூலை 4ம் தேதி, இதற்கான அறிவிப்பை வெளியிட்டு மவுனத்தைக் கலைத்திருக்கிறது பாஜக அரசு.


சேலத்தில் கொட்டிக்கிடக்கும் இரும்பு கனிம வளங்களைக் கொண்டு, உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டதுதான் சேலம் உருக்காலை. அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, திமுக தலைவர் கலைஞர் தலைமையில் 16.9.1970ல் சேலம் உருக்காலை தொடங்க அடிக்கல் நாட்டினார். இதற்காக 23 கிராமங்களில் இருந்து 3973 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த உருக்காலைக்காக 3000 குடும்பத்தினர் தங்கள் வீடுகளையும், விளை நிலங்களையும் துறந்துள்ளனர். 

 

g

 

இதையடுத்து, 1981ல் உற்பத்தியைத் துவக்கியது சேலம் உருக்காலை. தொடக்கத்தில் இந்த ஆலையின் ஆண்டு உற்பத்தித்திறன் 32 ஆயிரம் டன்னாக இருந்தது. இரண்டாம் கட்டமாக இந்த ஆலை விரிவாக்கம் (இஸட் மில்) செய்யப்பட்டபோது, இதன் உற்பத்தித்திறன் ஆண்டுக்கு 70 ஆயிரம் டன்னாக உயர்ந்தது. மூன்றாவது அலகு விரிவாக்கத்தின்போது ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆன ஒரு ரூபாய் நாணயம் தயாரிப்புக்கான காலி வில்லைகளை தயாரித்து, நாசிக்கிற்கு அனுப்பி வந்தது. 1995ல், நான்காம் நிலையில், வெப்ப உருட்டாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது ஸ்டெயின்லஸ் ஸ்டீல் மற்றும் கார்பன் சுருள் உற்பத்தித்திறன் ஆண்டுக்கு 3.60  லட்சம் டன்னாக உயர்ந்தது. இந்நிலையில் கடந்த 2008ல் ஐந்தாம் நிலையில் ஸ்டீல் மெல்ட்டிங் ஷாப் தொடங்கப்பட்டது. 2010ல் இருந்து இந்த அலகும் செயல்பட்டு  வருகிறது. 


சேலத்தில் இருந்து 37 நாடுகளுக்கு ஸ்டீல் பொருள்களை ஏற்றுமதி செய்து, ஆண்டுக்கு சராசரியாக 2000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி வந்த இந்த உருக்காலையைத் திட்டமிட்டே முடக்கி வருகிறது, இந்திய ஒன்றிய அரசு. விரிவாக்க மூலதனத்திற்காக வெளியில் இருந்து பெறப்பட்ட 2300 கோடி ரூபாய் கடன் சுமையில் தத்தளிப்பதாகவும், அதனாலேயே சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்றுவிட பரிந்துரைத்திருக்கிறது நிதி ஆயோக்.

g


பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதில் பாஜக அரசுக்கு வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இருந்தே தணியாத ஆர்வம் உண்டு. இதற்காக  அப்போது பங்குவிலக்கல் துறை என்ற தனி அமைச்சகமே தொடங்கப்பட்டது. அதன் பேரார்வம் இன்று வரை தணியவில்லை. தனியாருக்கு விற்பனை செய்வதற்காக  மும்பையைச் சேர்ந்த எஸ்பிஐ கேபிடல் நிறுவனத்தை நியமித்திருக்கிறது நடுவண் அரசு. 


அந்நிறுவனம், சேலம் உருக்காலையை ஒப்பந்தம் கோருவோர் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. சேலம் உருக்காலை மட்டுமின்றி, செயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விஸ்வேஸ்வரய்யா உருக்காலை (கர்நாடகா), அலாய் ஸ்டீல்ஸ் ஆலை (துர்காபூர்) ஆகிய ஆலைகளும் தனியாருக்கு விற்க ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது. அதற்கு முன்னதாக, எஸ்பிஐ கேபிடல் நிறுவனம், சேலம் உருக்காலையின் செயல்திறன், உள்கட்டமைப்பு, வரவு செலவு கணக்கு குறித்த ஓர் அறிக்கையை 129 பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

t


அந்த அறிக்கையில், சேலம் உருக்காலையின் 2015 - 2019 வரையிலான லாப, நட்டக்கணக்கு விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. 2015ல் இந்த ஆலையின் மொத்த வருவாய் 2228 கோடியாகவும், வரிக்கு முந்தைய லாபமாக 355.38 கோடியாகவும் இருந்துள்ளது. 2016ல் இதன் லாபம் 461.29 கோடியும், 2017ம் ஆண்டில் 234.99 கோடியும், 2018ம் ஆண்டில் 211.07 கோடியும், 2019 மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டில் 259 கோடி ரூபாயும் வரிக்கு முந்தைய லாபமாக ஈட்டியிருப்பதாகச் சொல்லப்பட்டு உள்ளது. 


தனியார்மயம் குறித்த அறிவிப்பு வெளியான மறுநாளே (ஜூலை 5) சேலம் உருக்காலையில் உள்ள நிரந்தர தொழிலாளர்கள் 950 பேரும் காலை 6 மணி முதல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு, தொழிலாளர்கள் குடும்பத்துடனும் போராட்டம் நடத்தினர். தொழிற்சங்க தரப்பில், இது தொடர்பாக அரசுத்தரப்பில் பேசி வருகின்றனர்.


செயில் குழுமத்திலேயே இளம் உருக்காலையான சேலம் உருக்காலை உண்மையிலேயே நஷ்டத்தில்தான் இயங்குகிறதா? தனியார்மய கொள்கையின் பின்னணி குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் தேவராஜூ (ஐஎன்டியுசி), பெருமாள் (தொமுச) ஆகியோரை சந்தித்துப் பேசினோம்.


''சேலம் உருக்காலை உள்ளிட்ட செயில் கட்டுப்பாட்டில் இயங்கும் உருக்காலைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்டெயின்லஸ் ஸ்டீல்கள்தான் உலகத்தரமானவை. இது உலகறிந்த உண்மை. இஸ்ரோவின் மங்கள்யான், சந்திரயான் விண்கலங்களிலும், நாசாவிலும் பெருமளவு சேலம் உருக்காலையின் உருக்குப் பொருள்கள்தான் பயன்ப டுத்தப்படுகிறது. 0.3 மி.மீ. தடிமன் வரையிலும் ஸ்டீல் தகடு தயாரிக்கும் தொழில்நுட்பம் நம்மிடம் மட்டுமே இருக்கிறது. ரயில் பெட்டிகள் தயாரிக்கவும் சேலம் உருக்காலை இரும்புதான் பயன்படுத்தப்படுகிறது.


புராசஸிங் செலவுகள், விரிவாக்கத்திற்காக வெளியில் வாங்கப்பட்ட கடன்களாலும்தான் இந்த ஆலை கடந்த சில ஆண்டுகளாக நட்டத்தில் இயங்க முக்கியக் காரணங்கள். விளக்கமாகச் சொல்வதெனில், ஆலை விரிவாக்கத்திற்காக செயில் நிர்வாகம், வெளி நிறுவனங்களிடம் இருந்து 2300 கோடி ரூபாய் கடன் வாங்கியது. அதற்கு, ஆண்டுக்கு வட்டி மட்டுமே 90 கோடி ரூபாய் செலுத்தி வருகிறோம். இதுபோக ஆண்டுக்கு 80 கோடி ரூபாய் தேய்மானமும் கணக்கிடப்படுகிறது. 


இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இன்றைய நிலையில் 800 கோடி ரூபாய் உருக்கு பொருள்கள் விற்பனை செய்யப்படாமல் ஆலையிலேயே முடங்கிக் கிடக்கிறது.  அந்த ஸ்டீல் பொருள்களை சந்தைக்கு அனுப்பாமல் சீனாவில் இருந்தும், ஜிண்டால் போன்ற தனியாரிடம் இருந்தும் ஸ்டீல் பொருள்களை இந்திய அரசு கொள்முதல்  செய்வது ஏன்? உண்மையில், இந்திய அரசு மேற்கொள்ளும் கட்டுமான திட்டங்களுக்காக செயில் நிறுவனத்திடம் இருந்து உருக்கு பொருள்களை வாங்கினாலே இந்த  ஆலைகளை மீண்டும் லாப பாதைக்குக் கொண்டு வந்துவிட முடியும்.  


இந்த ஆலைக்கு ஒரு யூனிட் மின்சாரம் 7.50 ரூபாய்க்கு தருகின்றனர். ஆனால் எங்களுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ள 50 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட ஓர் ஆலை அமைக்கும் திட்டம் வடிவமைக்கப்பட்டது. அத்திட்டத்தை செயல்படுத்தினால், மின்சார செலவு பாதியளவு குறைவதோடு, எங்கள் தேவை போக உபரி மின்சாரத்தை வெளிச்சந்தையிலும் விற்க முடியும். ஏனோ அத்திட்டத்தையும் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளனர். ரயில்பெட்டிகள் தயாரிக்கும் ஆலையையும் இங்கேயே தொடங்க வேண்டும். அதன்மூலம் புராசஸிங் செலவுகள் கணிசமாக குறைந்துவிடும். மேலும் சிறு தொழிற்சாலைகளையும் தொடங்க வேண் டும். அதற்கு போதுமான நிலம் சேலம் உருக்காலை வசம் இருக்கிறது. இத்திட்டங்களை செயல்படுத்தினாலே சேலம் உருக்காலையை சரிவில் இருந்து மீட்டுவிட முடியும்.


இந்த ஆலையை தனியாருக்கு விற்கும் முடிவை உடனடியாக நடுவண் பாஜக அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து தொழிலாளர்களும் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என்றனர்.


ஆனால், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்தலில் பாஜகவுக்கு வேறு ஓர் உள்நோக்கம் இருப்பதாகச் சொன்னார், சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி சுரேஷ் குமார். 


''தேசிய உருக்குக் கொள்கையின்படி, இந்தியாவில் ஆண்டுக்கு தனி நபர் ஒருவரின் ஸ்டீல் பொருள்களின் சராசரி நுகர்வு 68 கிலோவாக இருக்கிறது. இது உலகளவில் 250 கிலோவாக உள்ளது. இந்தியாவில் தனி நபர் ஸ்டீல் நுகர்வை 2030ம் ஆண்டுக்குள் 160 கிலோவாக உயர்த்தப்படும் என்று ஒருபுறம் கூறிவிட்டு, பொதுத்துறை உருக்காலைகளில் உற்பத்தியை முடக்கும் வேலைகளையும் இந்திய அரசு செய்கிறது. 


இதுவரை 37 நாடுகளுக்கு சேலம் உருக்காலையில் இருந்து ஸ்டீல் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஓராண்டாக ஏற்றுமதியை நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த ஆலையை ஏற்கனவே தனியாருக்கு விற்க முயன்றபோது தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக, அந்த முடிவை அப்போது நடுவண் அரசு கைவிட்டது. இப்போது தனியாருக்கு விற்க மீண்டும் துணிச்சலாக களத்தில் இறங்கியிருக்கிறது. 


பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதால் தொழிலாளர்கள் எல்லோரும் நவீன கொத்தடிமைகளாக மாற்றப்படும் அபாயம் இருக்கிறது. அதுமட்டுமின்றி, சமூக நீதி உரிமையை காவு வாங்கவே இப்படியொரு அஸ்திரத்தை பாஜக அரசு முன்னெடுக்கிறது. தனியார் கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் சென்றுவிட்டால், சமூக நீதி இடஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்புப் பெற முடியாது. 


சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் முடிவை உடனடியாக நடுவண் அரசு கைவிட வேண்டும். அத்துடன் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் நிலுவையை தள்ளுபடி செய்ததுபோல், சேலம் உருக்காலைக்காக செயில் நிர்வாகம் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என்றார்.


'ஒவ்வொருவரின் வாழ்விலும் செயில் இரும்பின் பயன்பாடு ஒரு துண்டாவது கலந்திருக்கும்' என்பதையே தாரக மந்திரமாக கொண்டிருக்கும் செயில் நிர்வாகம், தனியார்மயமாக்கும் திட்டத்தால் அதன் மையக்கொள்கையில் இருந்து விலகிப்போகிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.