கோவையில் பல இடங்களில் திருடி அதன்மூலம் சொகுசாக வாழ்ந்து வந்தஜார்கண்ட்மாநிலத்தைசேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 7 பேரைபோலீசார்கைது செய்துள்ளனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் பல நாட்களாகசெல்போன்பறிப்பு, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில்போலீசார்தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணனின் உத்தரவின் பேரில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கோவை பூமார்க்கெட்பேருந்து நிறுத்தம் அருகே முதியவர்ஒருவரைசுற்றிவளைத்த 3 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது அந்தகும்பலைசுற்றிவளைத்துகைதுசெய்தபோலீசார்அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் கோவை பகுதியில் தங்கியிருந்து திருடிவிட்டு சொந்த மாநிலமானஜார்கண்டுக்குசென்று சொகுசாகப்பணத்தைசெலவழித்துவிட்டு மீண்டும் கோவை வந்து தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் கைதான 7 பேரில் 4 பேர் கோவைமத்தியசிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மற்ற 3 சிறுவர்களும் கண்காணிப்பு பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.