Skip to main content

வீட்டிலிருந்தே குரல் கொடுப்போம்! தொழிலாளர்களின் மே தின கோரிக்கை!

Published on 03/05/2020 | Edited on 03/05/2020
Workers -



கோடை இளவரசியான கொடைக்கானலில் கோடை மலை அம்பேத்கார் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் உரிமையாளர் சங்கம் கொடைக்கானல் மேல்  மலை பகுதியில் செயல்பட்டு வருகிறது.  
 

இந்த கரோனா எதிரொலி மூலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலைக்கு போக முடியாமல்  வீட்டிலேயே முடங்கி கிடக்கிறவர்கள்தான் மே தினத்தை முன்னிட்டு வீட்டிலேயே தங்கள் கோரிக்கைகளை முன் வைத்து அங்கங்கே போராட்டத்தில் குதித்தனர். இதில் மங்கலம்கொம்பு, எம்ஜிஆர்நகர், பழம்புத்தூர் மற்றும் புதுப்புத்தூர் பகுதிகளில் உள்ள தொழிலாள மக்கள்  வீட்டிலேயே தங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்பதற்காக ஒயிட் பேப்பர் மற்றும் சார்ட் பேப்பர்களில்... போர்க்கால அடிப்படையில் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு மாதம் 9000 என மூன்று மாதத்திற்கு வழங்க வேண்டும்.
 

அதுபோல் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். இந்த கரோனா காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை கூடுதலாக  விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் போர்க்கால அடிப்படையில் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். இப்படி சில கோரிக்கைகளை முன்வைத்து எழுதி அதை வீட்டிலிருந்தவாரே தங்கள் எதிர்ப்பு குரலை அரசுக்கு  கோரிக்கைகளாக வெளி படுத்தியுள்ளனர்.
 

இது சம்பந்தமாக கோடைமலை அம்பேத்கார் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் உரிமையாளர் சங்க தலைவர் ஜெயசுதா, செயலாளர் திருமுருகன், பொருளாளர் கருப்புசாமி மற்றும் கோடை கிளை செயலாளர் அழகு சிவகாமி ஆகியோரிடம் கேட்டபோது, கரோனா மூலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள்  வேலை வெட்டிக்கு போக முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அதை மனதில் கொண்டு முதல்வர் எடப்பாடி யாரும்  அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாயும் ரேஷன் பொருட்களும் கொடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
 

ஆனால் இதுவரை கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உள்ள எங்கள் சங்கத்தில் இருக்கும் ஆயிரத்து 300 தொழிலாளர்களில் ஒருவருக்கு கூட அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித் தொகை வரவில்லை. வெறும் 25 பேருக்கு தான் ரேஷன் பொருட்களை கிடைத்துள்ளது. மற்றவர்களுக்கு அதுவும் கிடைக்கவில்லை. ஆகையால் அரசு அறிவித்த நிவாரண தொகையை உடனே அதிகாரிகள் வழங்க வேண்டும். தவறினால் போராட்டத்தில் குதிக்க கூட தயங்க மாட்டோம் என்று கூறினார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொடைக்கானலில் 'காட்டுத்தீ' - சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
'Forest Fire' in Kodaikanal Hill

கொடைக்கானலில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாக மலைப்பகுதிகளில் கோடைக்காலங்களில் காட்டுதீ ஏற்படும் நிலையில், சீதோஷ்ன நிலை மாற்றத்தின் காரணமாக தற்போதே காட்டுத்தீ ஏற்படும் சூழல் அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களாக கொடைக்கானலில் ஒரு சில பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. வனப்பகுதிகள் மட்டுமல்லாது வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களிலும் தீயானது பரவி வருகிறது. குறிப்பாக கொடைக்கானல் பெருமாள் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

இதனால், கிட்டத்தட்ட 50 ஏக்கருக்கு மேற்பட்ட வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. தொடர்ந்து வனச்சரக பணியாளர்கள் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ தடுப்பு கோடுகள் இடப்பட்டுள்ளதால் விரைவில் தீ பரவல் கட்டுப்படுத்தப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளூர்வாசிகள் மூலம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியான மலையாள திரைப்படமான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் வரவேற்பை பெற்ற நிலையில் அதில் இடம்பெற்றுள்ள குணா குகையை பார்வையிட இந்த கோடையில் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காட்டுத்தீ சம்பவங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி அன்று தேனி, குரங்கணி பகுதியில் கொழுக்குமலை அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில், ட்ரெக்கிங் சென்ற 23 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

கொடைக்கானல் மலைப்பாதையில் விபத்து; பயணிகள் காயம்

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
incident on Kodaikanal Hill Pass Passenger issue

கொடைக்கானல் மலைப்பாதையில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு செல்லக்கூடிய மலைப்பாதையில் அடிவாரத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் டம்டாம் பாறை என்ற இடம் உள்ளது. இங்கு கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி அதிவேகமாக டிப்பர் லாரி ஒன்று வந்துள்ளது. அதே சமயம் வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானலுக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது.

இந்நிலையில் டம்டாம் பாறை அருகே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி பேருந்தில் இருந்த 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பேருந்தின் முன்பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாயமான பெண்ணை அங்குள்ள பொதுமக்கள் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.