Advertisment

தேர்தலில் போட்டியிட்ட வாரிசுகளின் நிலை!

இந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக,அதிமுக,பாமக,தேமுதிக சார்பாக வாரிசுகளுக்கு சீட் கொடுக்கப்பட்டு தேர்தலை சந்தித்தனர். இதில் திமுக சார்பில் தூத்துக்குடியில் கனிமொழி,மத்திய சென்னையில் தயாநிதி மாறன்,தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன்,வட சென்னையில் கலாநிதி வீராசாமி ஆகியோர் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.மேலும் அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் முன்னிலையில் உள்ளார், மற்றும் தென் சென்னையில் போட்டியிட்ட ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன தோல்வியை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது.பாமக சார்பாக போட்டியிட்ட அன்புமணியும்,தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சியில் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ்சும் தோல்வியை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் திமுக சார்பாக போட்டியிட்ட அனைத்து வாரிசு வேட்பளர்களும் வெற்றி பெரும் நிலையில் உள்ளனர்.

Advertisment

dmk

admk dmdk loksabha election2019 pmk Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe