Skip to main content

வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் சர்ச்சை; சேலம் காவல்துறை எஸ்பி, துணை கமிஷனர் அதிரடி டிரான்ஸ்பர்

Published on 06/08/2023 | Edited on 06/08/2023

 

 Status Controversial Salem Police SP and Deputy Commissioner both transfer

 

சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையர் லாவண்யா குறித்து சர்ச்சைக்குரிய ஒரு பதிவை, மாவட்ட எஸ்பி சிவக்குமார் தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இரு அதிகாரிகளும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு  உள்ளனர். தமிழக காவல்துறையில் கடந்த சில நாட்களாகவே அதிரடி இடமாற்றங்கள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட் 4 ஆம் தேதி, காவல்துறையில் ஐஜி, டிஐஜி  அந்தஸ்திலான ஐபிஎஸ் அதிகாரிகள் 27 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.     

 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஆக. 5ம் தேதி, எஸ்பி / துணை ஆணையர் அந்தஸ்திலான ஐபிஎஸ் அதிகாரிகள் 33 பேரை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். கிரைம் ரேட் அதிகமாக உள்ள காவல் எல்லைகளில் பணியாற்றி வந்த அதிகாரிகள், புகார்களில் சிக்கியவர்கள், பணியில் கவனக்குறைவாக  இருந்தவர்களும் இந்த இடமாற்றப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். காவல்துறையில் இடமாற்றம் என்பது சகஜமானதுதான் என்றாலும், சேலம் மாவட்ட எஸ்பி சிவக்குமார், மாநகர துணை ஆணையர் லாவண்யா ஆகியோரின் இடமாற்றத்திற்கு வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் குறித்த சர்ச்சைதான் காரணம் என்கிறார்கள் காவல்துறையினர்.    

 

இது தொடர்பாக சேலம் மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் நம்மிடம் கூறியது: சேலம் மாவட்ட காவல்துறை எஸ்பியாக சிவக்குமார், கடந்த ஜனவரி மாதம்தான் பொறுப்பேற்றார். மாநகர காவல்துறையில் தெற்கு சரக துணை ஆணையராக லாவண்யா, கடந்த ஆண்டு ஜூன் 13ம் தேதி பொறுப்பு ஏற்றார். துணை ஆணையர் லாவண்யா, சேலம் மாநகரில் பணியில் சேர்ந்த கொஞ்ச நாளிலேயே சேலம் மாவட்ட எஸ்பி ஆக இடமாறுதல் பெற, காவல்துறையில் முக்கிய அதிகாரிகள் மூலம் முயற்சி செய்து வந்தார்.  இந்த நிலையில்தான், லாவண்யா இடமாறுதல் பெற முயற்சி செய்வது தொடர்பாக ஒரு கருத்தை, கடந்த ஜூலை மாதம் தனது ஸ்டேட்டஸ் ஆக  சேலம் மாவட்ட எஸ்பி சிவக்குமார் வைத்திருந்தார்.  'பதவியைப் பிடிக்க வசூல் வேட்டை' என்ற தலைப்புடன் அந்த ஸ்டேட்டஸ் பதிவு இருந்தது. அந்தப் பதிவில், ''சேலம் மாநகரத்தில் திருமதி லாவண்யா என்பவர் காவல் துணை ஆணையராக இருக்கிறார். இவர், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி பெற வேண்டும் என்று கடந்த 10 மாதங்களாகவே முயற்சி செய்து வருகிறார். ஓய்வு பெற்ற டிஜிபியிடம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சேலம் மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் பதவியைப் பெற முயற்சி செய்தார்,'' என குறிப்பிடப்பட்டு இருந்தது. எஸ்பி சிவக்குமார் தனது அலுவலக செல்போன் எண்ணிலேயே சக ஐபிஎஸ் பெண் அதிகாரி குறித்த அவதூறான கருத்தை ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்த விவகாரம், அடுத்த சில வினாடிகளில் காவல்துறை வட்டாரத்தில் காட்டுத்தீ போல பரவியது.  

 

இதுகுறித்து எஸ்பியின் கவனத்திற்கு யாராவது கொண்டு சென்றார்களோ என்னவோ, அடுத்த சில நிமிடங்களில் அந்த சர்ச்சைக்குரிய  வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பதிவை அவர் நீக்கி விட்டார். ஆனாலும் சர்ச்சை மட்டும் அடங்கவில்லை. இதுகுறித்து அப்போது எஸ்பி சிவக்குமாரிடம் கேட்டபோது, 'இது என்னை அறியாமல் நடந்த தவறு. இதற்கு நான் மிகவும் வருத்தம்  தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தை வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் ஆக வைப்பது மிகவும் தவறு. இது தொடர்பாக சேலம்  மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி மற்றும் துணை ஆணையர் லாவண்யா ஆகியோரிடம் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தேன்” என்று கூறினார். துணை ஆணையர் லாவண்யா, “எஸ்பி சிவக்குமார் எதற்காக அப்படியொரு ஸ்டேட்டஸ் வைத்திருந்தார் என்று தெரியவில்லை” என்று  சாதாரணமாக சொல்லி விட்டு கடந்து போனார். ஆனாலும் இந்த விவகாரம் காவல்துறையின் அனைத்து மட்டங்களிலும் பூதாகரமான சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, டிஜிபி  சங்கர் ஜூவாலிடம் இருந்து, ஸ்டேட்டஸ் வைத்தது தொடர்பாக 15 நாள்களில் உரிய விளக்கம் அளிக்கும்படி சேலம் மாவட்ட எஸ்பி சிவக்குமாருக்கு ஜூலை 14ம் தேதி ஓர் ஓலை பறந்து வந்தது.    

 

இது தொடர்பாக அவர் அளித்த விளக்கம், டிஜிபி அலுவலகத்திற்கு திருப்தி அளிக்கவில்லை எனத் தெரிகிறது. அதேநேரம், சேலம் மாநகரில் கடந்த ஜூன், ஜூலையில் அடுத்தடுத்து கொலைகள், திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்ச்சியாக நடந்தன.  ரவுடிகள் மீது குண்டாஸ் வழக்கு போடுவதில் முனைப்பு காட்டினாலும் கூட குற்றங்களை கட்டுப்படுத்துவதில் தொய்வு உள்ளது.  இதனால்தான் எஸ்பி சிவக்குமார், துணை ஆணையர் லாவண்யா ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் தூக்கி அடித்திருக்கிறது தமிழக உள்துறை,''  என்கிறார்கள் காவல்துறையினர்.

 

துணை ஆணையர் லாவண்யா, தற்போது சென்னை காவலர் பயிற்சிப்பள்ளி முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார். எஸ்பி சிவக்குமார், சென்னையில் உள்ள சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். தெரிந்தோ தெரியாமலோ வைக்கப்பட்ட வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ், காவல்துறையின் மாண்பைக் குலைத்திருக்கிறது எனப் புலம்புகிறார்கள் நேர்மையான காவல்துறை அதிகாரிகள்.   

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவடியில் இரட்டைக் கொலை; போலீசாரிடம் சிக்கிய செல்போன்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
aavadi siddha doctor and his wife incident Cell phone caught by the police

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள மிட்டனமல்லியில் சித்த மருத்துவர் சிவன் நாயர் என்பவரும், அவரது மனைவி பிரசன்னகுமாரி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இத்தகைய சூழலில் அவரது இல்லத்திற்கு சிகிச்சைக்கு வருவதுபோல் நேற்று (28.04.2024) இரவு வீட்டிற்குள் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். அதன்பின்னர் சித்த மருத்துவர் சிவன் நாயரையும் அவரது மனைவி பிரசன்னகுமாரியையும் மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாராணை மேற்கொண்டனர். அப்போது இந்த இரட்டைக் கொலை நடந்த இடத்தில் செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதோடு கொலையான மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்தவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கொலையாளிகள் பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அருகே சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கழுத்து அறுத்து கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தேவகவுடா மகன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Deve Gowda's son issue in karnataka 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இத்தகைய சூழலில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

Deve Gowda's son issue in karnataka 

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் அவரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Deve Gowda's son issue in karnataka 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது ஏற்கெனவே பாலியல் புகார் உள்ள நிலையில் தற்போது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.