Skip to main content

37 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லைக்கு போகும் நடராஜர் சிலை!

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட நடராஜர் சிலையை, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாரால் மீட்கப்பட்டு இன்று கும்பகோணம் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டது.
 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் உற்சவ மூர்த்தியாக இருந்த 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடராஜர் சிலை, கடந்த 1982- ஆம் ஆண்டு திருடப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு ஆண்டுகளில் வழக்கை முடித்துக் கொண்டனர். ஆனால் சிலை கண்டுபிடிக்கப்படவில்லை. 

Statue of Nataraja going to nellai after 37 years

இந்நிலையில், சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்ட பின் அவரது தலைமையிலான சிலை கடத்தல் பிரிவு போலீசாரிடம் வழக்கு விசாரணைக்கு வந்த பிறகே நடராஜர் சிலை 4 கண்டங்களைக் கடந்து ஆஸ்திரேலியாவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 

இதையடுத்து சிறப்பு அனுமதி பெற்று 37 ஆண்டுகளுக்குப் பிறகு நடராஜர் சிலையை மீட்டு சிலை கடத்தல் பிரிவு போலீசார் சென்னை கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து சிலை கடத்தல் வழக்குகள் ஒருங்கிணைத்து விசாரிக்கப்படும் கும்பகோணம் நீதிமன்றத்திற்கு இன்று நடராஜர் சிலை பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Statue of Nataraja going to nellai after 37 years


சிலை வருகையை மேலதாளம் முழங்க பூ போட்டு வரவேற்று, தீட்சிதர்கள் கொண்டு பூஜை போடப்பட்டு திறந்தனர். சிலை குறித்து பல்வேறு தகவலைக் கேட்ட நீதிபதி மீண்டும் சிலையை சிலை கடத்தல் பிரிவு ஏ.டி.எஸ்.பி. ராஜாராமிடம் ஒப்படைத்தார். இதையடுத்து நடராஜர் சிலை கல்லிடைக்குறிச்சி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
 

37 ஆண்டுகளுக்குப் பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் மீட்கப்பட்ட நடராஜர் சிலை நாளை முதல் பக்தர்களின் வழிபாட்டிற்கு  வைக்கப்பட உள்ளது என்பது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.