நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட நடராஜர் சிலையை, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாரால் மீட்கப்பட்டு இன்று கும்பகோணம் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் உற்சவ மூர்த்தியாக இருந்த 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடராஜர் சிலை, கடந்த 1982- ஆம் ஆண்டு திருடப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு ஆண்டுகளில் வழக்கை முடித்துக் கொண்டனர். ஆனால் சிலை கண்டுபிடிக்கப்படவில்லை.

Statue of Nataraja going to nellai after 37 years

Advertisment

இந்நிலையில், சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்ட பின் அவரது தலைமையிலான சிலை கடத்தல் பிரிவு போலீசாரிடம் வழக்கு விசாரணைக்கு வந்த பிறகே நடராஜர் சிலை 4 கண்டங்களைக் கடந்து ஆஸ்திரேலியாவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சிறப்பு அனுமதி பெற்று 37 ஆண்டுகளுக்குப் பிறகு நடராஜர் சிலையை மீட்டு சிலை கடத்தல் பிரிவு போலீசார் சென்னை கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து சிலை கடத்தல் வழக்குகள் ஒருங்கிணைத்து விசாரிக்கப்படும் கும்பகோணம் நீதிமன்றத்திற்கு இன்று நடராஜர் சிலை பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisment

Statue of Nataraja going to nellai after 37 years

சிலை வருகையை மேலதாளம் முழங்க பூ போட்டு வரவேற்று, தீட்சிதர்கள் கொண்டு பூஜை போடப்பட்டு திறந்தனர். சிலை குறித்து பல்வேறு தகவலைக் கேட்ட நீதிபதி மீண்டும் சிலையை சிலை கடத்தல் பிரிவு ஏ.டி.எஸ்.பி. ராஜாராமிடம் ஒப்படைத்தார். இதையடுத்து நடராஜர் சிலை கல்லிடைக்குறிச்சிகோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

37 ஆண்டுகளுக்குப் பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் மீட்கப்பட்ட நடராஜர் சிலை நாளை முதல் பக்தர்களின் வழிபாட்டிற்கு வைக்கப்பட உள்ளது என்பது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.