சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று (06.06.2023) மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ஆன்லைன் வழக்கு போடுவதை ரத்து செய்ய வேண்டும். காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும். ஆன்லைன் மணல் விற்பனை பதிவினை முறைப்படுத்த வேண்டும். அரசு நிர்ணயம் செய்த விலைக்கு மணல் விற்கப்பட வேண்டும். எஃப்.சீ., டீசல், பெட்ரோல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். தமிழக எல்லை சோதனைச் சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் நடைபெற்ற போராட்டம் (படங்கள்)
Advertisment