தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னிலையில் இன்று (27/05/2022) தலைமைச் செயலகத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் சு.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ் குமார், இரா.கிரிராஜன் ஆகிய மூன்று பேரும், தேர்தல் நடத்தும் அலுவலரும், சட்டப்பேரவை செயலாளருமான கே.சீனிவாசனிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வின் போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.