state human rights commission president appointed

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக எஸ்.பாஸ்கரனை நியமிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்தார். அதையடுத்து, மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக பாஸ்கரனை நியமித்துத் தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார்.

Advertisment

மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக பாஸ்கரன் மூன்று ஆண்டுகள்வரை பதவிவகிப்பார் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக 2016- ஆம் ஆண்டு முதல் 2018- ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த மீனாகுமாரியின் பதவிக்காலம் டிசம்பர் 25- ஆம் தேதியுடன் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.