Skip to main content

'யாராக இருந்தாலும் மாநில அரசு தண்டணை வழங்கவேண்டும்'- பா.ஜ.க இளைஞரணி தலைவர் பேச்சு!

Published on 12/09/2020 | Edited on 12/09/2020

 

'The state government should punish whoever it is' - BJP youth leader speech

 

பாரத பிரதமாின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடப்பது வண்மையாகக் கண்டிக்கதக்கது என்றும் இந்த ஊழலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் அவர்கள் மீது மாநில அரசு தண்டணை வழங்கவேண்டும் என்றும் பா.ஜ.க மாநில இளைஞரணி தலைவர்வினோஜ் செல்வம் கூறியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பா.ஜ.க புதிய இளைஞரணி நிர்வாகிகள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம், மாநிலச் செயலாளர் தங்க.வரதராஜன் உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளார்களைச் சந்தித்த மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம், "ஒரு குழந்தை இரண்டு மொழி படிக்க வேண்டுமா மூன்று மொழி படிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யவேண்டியது பெற்றோர்களே தவிர திராவிட முன்னேற்றக் கழகம் கிடையாது. ஏழை மாணவர்கள் படிக்கக் கூடிய மாநகராட்சி, நகராட்சி, கிராமப்புற பள்ளிகளில் இரண்டு மொழி கற்கவேண்டும் என்கிற போலித்தன்மையை மக்களுக்கு தெளிவுபடுத்தும் விதமாக மும்மொழி முக்கியத்துவத்தினை வலியுறுத்தி பெரிய யாத்திரை செல்வதற்கு முடிவு செய்யபட்டுள்ளது.

 

ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் நிதிஉதவி வழங்கும் திட்டத்தில் 46 லட்சம் விவசாயிகள் தமிழகத்தில் பயன்பெற்று வருகிறார்கள். இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு 5 லட்சம்கோடி முறைகேடு தமிழகத்தில் இருப்பது மிகவும் அதிர்ச்சிகரமான விசயமாக இருக்கிறது. பாரத பிரதமர் ஏழை விவசாயிகளுக்கு செய்து தரக்கூடிய நலத்திட்டங்களில் ஏமற்ற நினைப்பது மிக மிகக் கண்டிக்கதக்கது .

 

Ad


அதேபோல பாரத பிரதமாின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடு நடப்பது வன்மையாகக் கண்டிக்கதக்கது. இந்த ஊழலில் ஈடுபடுபவர்கள் யாரக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் அவர்கள் மீது மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுத்து தண்டணை வழங்கவேண்டும். வருகின்ற தேர்தலில் பா.ஜ.க தனித்து நின்றால் கூட 60 இடங்களில் வெற்றி பெரும்," என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.