Advertisment

எம்எல்ஏ-வை தொடர்ந்து காவலருக்கும் கரோனா - சட்டப்பேரவையை பூட்டிய மாநில அரசு!

hjkl

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி மனித சமூகத்தை அச்சுறுத்தி வருகிறது. லட்சகணக்கான மக்கள் இந்நோய் காரணமாக பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளன.

Advertisment

தமிழகத்தை பொறுத்த வரையில் கரோனாவின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகின்றது. அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. சட்டமன்ற உறுப்பினர்களில் முதலில் திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சை பலனின்றி சில வாரங்களுக்கு முன் மரணமடைந்தார். அடுத்து தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மஸ்தான், கணேசன், கீதா ஜீவன்,காந்தி, செங்குட்டுவன் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

Advertisment

சிலர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மற்ற உறுப்பினர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில், புதுச்சேரியில் கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கரோனா உறுதியானது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொண்டார். இவருக்கு பாதிப்பு உறுதியானதை அடுத்து நேற்று சபை திறந்தவெளியில் நடைபெற்றது. இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சிக்கு பாதுகாப்புக்கு வந்திருந்த காவலர் ஒருவருக்கு தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. காவலருக்கு தொற்று உறுதியானதால் சட்டப்பேரவை வளாகம் புதன்கிழமை வரை மூடப்பட்டுள்ளது.

corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe