மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பழனிகுமாரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொறுப்பேற்கும் நாளில் இருந்து இரண்டு ஆண்டுகள் வரை பழனிகுமார் மாநில தேர்தல் ஆணையராகப் பதவி வகிப்பார் என அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்புப் பணி- மூன்று மாவட்டத்திற்கு கூடுதல் அதிகாரிகள் நியமனம்!
சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் கரோனா தடுப்புப் பணிக்கு கூடுதலாக ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம்- நிர்மல்ராஜ், சேலம் மாவட்டம்- முருகேஷ், திருப்பூர் மாவட்டம்- கணேசன் ஆகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.