Skip to main content

குடியரசு தினத்தை மறுநாள் கொண்டாடிய அரசுக் கல்லூரி! -புறக்கணித்த மாணவர்கள்!

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

‘சாத்தூரிலுள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்பு மாதிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடியரசு தினத்தன்று தேசியக்கொடி ஏற்றப்படவில்லை. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குடியரசு தினத்தைப் புறக்கணித்தார்கள்.’ என நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் வந்த செய்தி தவறானது என்று அந்தக் கல்லூரியின் பேராசிரியர்களும், அலுவலகப் பணியாளர்களும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
 

 State College celebrates Republic Day - Forgotten students!


அக்கல்லூரியில் பணிபுரியும் 24 பேர் கையெழுத்திட்டுள்ள அந்தக் கடிதத்தில், ‘சுதந்திர தின விழா, சாலை பாதுகாப்பு வார விழா, பொங்கல் விழா என எத்தனையோ நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தினோம். அதுகுறித்த செய்திகள் எதுவும் வெளிவந்ததில்லை. இருட்டடிப்பு செய்யப்பட்டது. கிராமப்புற மாணவ, மாணவிகள் படிக்கும் இக்கல்லூரியின் தேவைகள் எதுவுமே செய்தியாக வெளிவந்ததில்லை. ஆனால், குடியரசு தினத்தன்று தேசியக்கொடி ஏற்றவில்லை என்ற செய்தி மட்டும் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ளது.’ என்று சாத்தூர் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்தினரைக் கண்டித்துள்ளனர்.  

 State College celebrates Republic Day - Forgotten students!


சாத்தூர் பத்திரிகையாளர்கள் சார்பில் நம்மிடம் பேசிய மணிவண்ணன் “அக்கல்லூரியின் முதல்வர் முத்துகுமார் கல்லூரிக்கே சரியாக வருவதில்லை என்று மாணவர்கள் தரப்பில் குமுறலாகச் சொன்னார்கள். குடியரசு தின விழா குறித்த அறிவிப்போ, சுற்றறிக்கையோ அனுப்பவில்லை என்றார்கள். அதனால்தான், பேராசிரியர்களும் மாணவர்களும் குடியரசு தினத்தைப் புறக்கணித்ததாகவும் சொன்னார்கள்.

 

 State College celebrates Republic Day - Forgotten students!

 

இதில் கொடுமை என்னவென்றால், குடியரசு தினத்துக்கு மறுநாள் (27-ஆம் தேதி) திங்கட்கிழமை கல்லூரிக்கு வந்த மாணவிகளில் 8 பேரை வைத்துக் கொடியேற்றி, இனிப்பு வழங்கியது  படம் எடுத்து, நாங்கள் குடியரசு தினத்தைக் கொண்டாடி, மாணவர்களுக்குப் இனிப்பும் வழங்கினோம் என்பதற்கு இதோ போட்டோ ஆதாரம் என்று எங்களுக்கு (பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்தினர்) அனுப்பி வைத்தார்கள். அது ஒரு  ‘செட்-அப்’ நிகழ்ச்சி என்பது மாணவி சிரிக்கும் போட்டோவைப் பார்த்தாலே தெரியும். 850 பேர் படிக்கும் கல்லூரியில் வெறும் 8 மாணவிகளை வைத்து குடியரசு தினத்தைக் கொண்டாடினோம் எனச் சொல்வது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

 

 State College celebrates Republic Day - Forgotten students!


தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகிலுள்ள எஸ்.குமராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் குடியரசு தினம் கொண்டாடப்படவில்லை. அதனால், ஆசிரியர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறார் கல்வித்துறை அதிகாரி. சாத்தூரிலும் அரசுக் கல்லூரியில் குடியரசு தினம் கொண்டாடப்படவில்லையே என்ற ஆதங்கத்தோடு  செய்தி வெளியிட்டோம். அதைப்போய்,  சித்தரித்தோம் என்று கூசாமல் பொய் சொல்கிறார்கள்.” என்று வேதனைப்பட்டார்.

அக்கல்லூரியின் முதல்வர் முத்துகுமாரை தொடர்புகொண்டு ‘என்ன நடந்தது?’ என்று கேட்டோம். . “எனக்கு உடல் நலமில்லை, இப்போது பேச முடியாது.” என்று லைனைத் துண்டித்தார்.  

 

 State College celebrates Republic Day - Forgotten students!


‘ஞாயிற்றுக்கிழமை என்றால் விடுமுறை நாளாயிற்றே! அன்றுதானா குடியரசு தினம் வரவேண்டும்?’ என்று நினைத்திருப்பார்கள் போலும்!  தேசபக்தியை வெளிப்படுத்துவதிலுமா போலித்தனம்? வேறென்ன சொல்லமுடியும்?  தேசிய உணர்வோடு  உரக்கச் சொல்வோம்! ஜெய்ஹிந்த்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.