Skip to main content

பயணிகளின் தாகம் தணிக்கும் அரசு பேருந்து நடத்துனர்: பாராட்டிய அதிகாரிகள்!

Published on 27/05/2019 | Edited on 27/05/2019

ஒரு பேருந்து நிலையத்திலும் கூட பயணிகள் குடிக்க தண்ணீர் வைப்பதில்லை. ஆனால் ஒரு அரசு பேருந்து நடத்துனர் தன் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தினசரி 60 லிட்டர் தண்ணீரை குடிக்க கொடுகிறார். அவசரமாக பேருந்தில் ஏறும் பயணிகள் தாகம் வந்தாலும் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தாகத்தில் அவதிப்படுவதை காண முடியும். ஆனால் மதுரை – தஞ்சை பேருந்தில் ஏறினால் அனைவருக்கும் தாகம் தணிக்க தண்ணீர் கொடுப்பார் அந்த நடத்துனர் என்கிறார்கள் பயணிகள். 

 

 The state bus conductor are thirsty for passengers


 

மதுரை போக்குவரத்துக் கழகத்தில் இருந்து மதுரை – தஞ்சை செல்லும் நீண்ட தூரப் பேருந்து புதுக்கோட்டை வழியாக செல்கிறது. அந்த பேருந்தில் பயணிகள் சுமார் 4 மணி நேரம் வரை தொடர்ந்து பயணிக்க வேண்டியுள்ளது. அவசரத்தில் தண்ணீர் எடுக்காமல் வரும் பயணிகள் அச்சப்பட தேவையில்லை. பயணிகளுக்கு பயணச் சீட்டு கொடுத்து முடித்த பிறகு தண்ணீர் பாட்டில்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பயணியிடமும் சென்று குடிக்க தண்ணீர் வேண்டுமா என்று கேட்கிறார் நடத்துனர். தாகத்தில் இருக்கும் பயணிகள் அவர் கொடுக்கும் தண்ணீரை வாங்கி குடிக்கின்றனர். பிறகு எப்ப யாருக்கு தாகம் எடுத்தாலும் தயங்காமல் கேளுங்க தண்ணீர இருக்கு என்று சொல்லிவிட்டு தனது இருக்கையில் அமர்கிறார்.


 

 The state bus conductor are thirsty for passengers

 

அந்த நடத்துனர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் திருஞானம்(45). அவரே சொல்லும் போது.. நீண்ட தூரம் பயணம் செல்லும் போது தாகம் எடுத்து தண்ணீர் கிடைக்காமல் நானே பலமுறை தவித்திருக்கிறேன். எல்லா பயணிகளும் தண்ணீர் கொண்டு வருவதில்லை. அதை நினைத்து தான் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நான் செல்லும் பேருந்தில் உள்ள பயணிகளுக்கு தாகம் தணிக்க குடிதண்ணீர் வழங்கி வருகிறேன். ஒரு நாளைக்கு சுமார் 60 லிட்டர் வரை தண்ணீர் கொடுக்கிறேன். ஒவ்வொரு இடத்திலும் நல்ல தண்ணீர் கிடைக்கும் இடங்களில் தண்ணீர் பாட்டில்களில் நிரப்பி வைத்துவிடுவேன். பிறகு பயணிகளுக்கு கொடுப்பது வழக்கம். நான் தண்ணீர் கொடுப்பதை பார்த்து பயணிகள் என்னிடம் அன்பாக பேசுவார்கள். பலரும் என்னை பாராட்டி செல்கிறார்கள் என்றார். பல பேர் என் செல்போன் எண் 9786754347 லும் பாராட்டு சொல்கிறார்கள் என்றார். 
 

 

பயணிகளின் தாகம் தணிக்கும் அரசு பேருந்து நடத்துனரின் செயலை பார்த்து புதுக்கோட்டை போக்குவரத்துக் கழக அதிகாரிகளும், வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் பலதுறை அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி பொன்னாடை அணிவித்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து; 5 பேர் பலியான சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
incident for tirupur vellakoil car and govt bus

திருப்பூரில் அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையம் என்ற பகுதியில் திருப்பூரில் இருந்து திருச்சிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே போன்று திருப்பூரில் உள்ள நல்லிக்கவுண்டன் வலசு என்ற பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தனது காரில் குடும்பத்தினர் 6 பேருடன் பயணம் செய்துள்ளார். இவர்கள் திருக்கடையூரில் உள்ள கோவிலுக்கு ஆன்மிக பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் தான் ஓலப்பாளையத்தில் இன்று (09.04.2024) அதிகாலை நேருக்கு நேர் எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே  காரில் பயணித்த இளவரசன் (வயது 26), சந்திரசேகரன் (வயது 60), சித்ரா (வயது 57), அறிவித்ரா (வயது 30) மற்றும் 3 மாத பெண் குழந்தை சாக்சி ஆகிய 5 பேரும் உயிரிழந்தனர். மேலும் சசிதரன் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வெள்ளக்கோயில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.