மாநில எல்லையில் கரோனா பரிசோதனை!

state border check post health department rt pcr test

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் இ- பாஸ் பெற வேண்டும் என அறிவித்துள்ளது தமிழக அரசு. இதனால், மாநில எல்லைகளில் சோதனை முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதாரத்துறையும் மாநில எல்லைகளில் மருத்துவக் குழுவை நியமித்துள்ளது. இ- பாஸ் உடன் வருபவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்களை ஆர்டி- பிசிஆர் பரிசோதனைசெய்யத்துவங்கியுள்ளனர் மருத்துவத்துறையினர். அத்துடன் பரிசோதனை செய்பவர்கள் குறித்த முழு தகவல்களையும் பெற்றுக் கொள்கின்றனர். பரிசோதனைக்குப் பின்னர் அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்குப் பயணம் செல்ல அனுமதிக்கின்றனர்.

border coronavirus state health department tn govt
இதையும் படியுங்கள்
Subscribe