சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அதிநவீன தீயணைப்பு வாகனம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

அதிநவீன கருவிகளையும், படிக்கட்டுகளையும் கொண்ட இந்த வாகனத்தை போயிங் 747, ஏர்பஸ் 350 போன்ற பெரிய ரக விமானங்களில் தீ விபத்து ஏற்பட்டாலும், தீயை அணைக்கும் பணியிலும், பயணிகளை மீட்கும் பணியிலும் ஈடுபடுத்த முடியும்.

Advertisment

உயரமான இடங்களில் ஏற்படும் தீயை அணைக்கவும், இந்த வாகனத்தைப் பயன்படுத்த முடியும். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீயணைப்புத்துறையின் மூலமாக, இந்த வாகனம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.