Skip to main content

பிணந்தின்னிக் கழுகுகள் கணக்கெடுப்பு தொடக்கம்!!

Published on 26/12/2018 | Edited on 26/12/2018

வனப்பகுதிகளில் வாழுகிற சிங்கம் புலி, சிறுத்தைகள் உள்ளிட்ட, கொடிய மிருகங்கள் தொடங்கி மான், மிளா, கரடி, சிங்கவால் குரங்கு, காட்டுப்பன்றி ஆகிய சாதாரண மிருகங்கள் பற்றி வருடம் தோறும் வனத்துறை கணக்கெடுப்பது நடைமுறையில் உள்ளது. தற்போது அரிதிலும் அரிதான பிணந்தின்னி கழுகுகளின் கணக்கெடுப்பு தொடங்கவேண்டும் என அறிவிக்கப்பட்டு முதன் முதலாக வரும் பிப்ரவரி முதல் தொடங்க விருக்கிறது.

 

Start Survey about vultures

 

காகம், பருந்து போன்ற சாதாரண பறவைகளின் உணவுப் பழக்க வழக்கங்களும், பிணந்தின்னி கழுகுகளின் உணவுப் பழக்க வழக்கங்களும் மாறுபட்டவை. முன்னவைகள், பிணங்கள் பக்கம் அண்டுவதில்லை. பிணந்தின்னிக் கழுகுகளோ பிணத்தின் துண்டுகளை மட்டுமே உண்டு வாழ்வதால் அவை பிணந்தின்னி என்ற அழைக்கப்பட்டன. ஆனால் இவைகளின் எண்ணிக்கையோ மிகவும் குறைவு. தமிழகத்தில் நீலகிரி, முதுமலை, சத்தியமங்கல், போன்ற வனப்பகுதிகளிலும், மோயாறு, குமரி மாவட்டத்தின் அண்டைப் பகுதியான கேரளாவின் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளிலும், பல வகையான கழுகுகள் வாழ்கின்றன. ஆனால் பிணந்தின்னி கழுகுகளில் மஞ்கள் திருடி பாறு, வெண்முதுகு பாறு, நீண்ட அலகு பாறு, செந்தலை பாறு, என நான்கு வகை கழுகுகள் உள்ளன. இவைகள் பெரும்பாலும், கால் நடைகளின் மாமிசத்தையே இழுத்துக் கொத்தி உண்டு வாழ்கின்றன. அதற்கேற்றாற் போல் அதன் அலகுகள் கூர்மையாகவும் நீண்டும் உள்ளன. காண்பதற்கு கர்ண கொடூரமாக இருக்கும் இவைகள் ஒரே கொத்தில் சதையை அள்ளிவிடும் என்கிறார்கள் கால் நடை மருத்துவர்கள்.

 

Start Survey about vultures

 

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கண்க்கெடுப்பின்படி தேசம் முழுவதிலும் 8 கோடி கழுகுகள் இருந்ததாக கண்டறியப்பட்டது. ஆனாலும் பிணந்தின்னி கழுகுகள் போதிய உணவு கிடைக்காமல் அழிவின் பிடியில் உள்ள நிலையில் தமிழகத்தின் மோயாறு பகுதிகளில் நல்லமுறையில் தனது இனப் பெருக்கத்தை விரிவு செய்து. வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. தவிர வனவிலங்குகளின் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும் காலங்களில் பிணந்தின்னி கழுகுகள் தொடர்பாக முறையாக கணக்கெடுக்கப்படுவதில்லை. எனவே இவ்வகை இன கழுகுகளின் கணக்கெடுப்பு தனியே நடத்தப்பட வேண்டும் என்று விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் தான் தென்னிந்தியாவில் பிணந்தின்னி கழுகுகளின் கணக்கெடுப்பு பணி, வரும் பிப்ரவரி முதல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா கர்னாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மேற் கொள்ளப்படவிருக்கிறது. மேலும், இப்பணியை வல்ச்சர் கன்சர்வேசன் ஒர்க்கிங் குரூப், எனப்படும் பறவைகள் கண்காணிப்பு குழு சார்பில் நடத்தப்படுகிறது.

 

Start Survey about vultures

 

தவிர கழுகு இனங்கள் நாளொன்றுக்கு நூறு கி.மீ. தூரம் வரை பறக்கும் வல்லமை கொண்டவை. எனவே மாநில அளவில் கணக்கெடுப்பு நடத்தினால் பலன் கிடைப்பதில்லை என்பதால் தென்னிந்திய அளவில் ஒருங்கிணைத்து இக்கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில், நீலகிரி, முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆகிய மலைக்காடுகளிலும் கேரளாவில் அடர்த்தியான வயநாடு வன உயிரின மையத்திலும் அதோடு இணைந்த முதுமலை பந்திப்பூர் நாகர்கேரளா, சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப்பகுதியிலும் கணக்கெடுப்பு நடந்தப்பட உள்ளது என்கிறார்கள்.

 

அரிய வகையான பிணந்தின்னி கழுகுகளின் எண்ணிக்கை இருபது ஆண்டுகட்குப் பிறகு வெளிவர வாய்ப்புகள் வெளிப்படுகின்றன.

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்காத சிறுத்தை! பிடிக்க முடியாமல் தடுமாறும் வனத்துறை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 forest department is struggling to catch the elusive leopard

கடந்த 2ஆம் தேதி மயிலாடுதுறை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த வனத்துறையினர் மற்றும் அதிகாரிகளை வரவழைத்து, தனிக்குழு அமைத்து அந்தச் சிறுத்தையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதன்படி, சிறுத்தையின் காலடித்தடம் அது சிறுநீர் கழித்ததற்கான அடையாளம், அதன் கழிவு ஆகியவற்றை அடையாளம் கண்டு, சிறுத்தை மயிலாடுதுறை பகுதியில் நடமாடுவதை உறுதி செய்தனர். அதைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை செய்து வந்த நிலையில், நான்கு தினங்களுக்கு முன் அரியலூர் மாவட்டம் செந்துறை நகரப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்தனர். இது குறித்து அரியலூர் வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதி இளைஞர்களுடன் சிறுத்தையைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர்.

 forest department is struggling to catch the elusive leopard

ஒரு லேத் பட்டறையில் பதுங்கி இருந்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியதைப் பலரும் பார்த்தனர். இதையடுத்து சிறப்பு குழுவினர் பெரிய கூண்டை கொண்டு வந்து செந்துரை அருகே உள்ள ஓடை பகுதியில் கூண்டுக்குள் ஆட்டை அடைத்து வைத்தனர். ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு ஆட்டை உணவாக சாப்பிட்டு சிறுத்தை அந்த கூண்டை தேடி வரும் அப்போது அதில் மாட்டிக்கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் சிறுத்தை அந்தக் கூண்டுக்குள் வந்து சிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து செந்துறையைச் சுற்றிலும் உள்ள முந்தரிக்காட்டு பகுதிகளுக்குள் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுத்தை அரியலூர் மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டம் அல்லது அருகில் உள்ள கடலூர் மாவட்ட பகுதிகளுக்குள் சென்று இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். தற்போது நிலவரப்படி தினசரி ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் வரை சிறுத்தை இரவு நேரங்களில் இடம்பெயர்ந்து சென்றுள்ளது.

 forest department is struggling to catch the elusive leopard

இதனடிப்படையில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட எல்லைய ஒட்டிய கிராமங்களில் வனத்துறையினர் தங்களது கண்காணிப்பைத் தீவிர படுத்தியுள்ளனர். இதனைப்போன்று கடந்த 2013 ஆம் ஆண்டு பெரம்பலூர் நகரை ஒட்டி உள்ள பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பெரம்பலூர் அருகில் உள்ள துறைமங்கலம், கவுல்பாளையம் ஆகிய பகுதிகளில் சிறுத்தையைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு அப்பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுக்குள் ஆட்டை விட்டு காட்டுப்பகுதியில் வைத்தனர். அப்போது அந்தச் சிறுத்தை ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு அதை கடித்து தின்பதற்காக கூண்டுக்குள் சென்று சிக்கியது. இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், அந்தச் சிறுத்தையை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இவ்வாறு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரம்பலூர் ,அரியலூர்,மாவட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Next Story

தண்ணீர் தேடிச் செல்லும் வன விலங்குகள் பலியாகும் துயரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Tragedy of wild animals lost life in search of water

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளிலும் தண்ணீர் இன்றி மரங்கள் கருகி வருவதுடன் வனவிலங்குகளும் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ள வனப்பரப்புகள் மற்றும் கீரமங்கலம் மற்றும் சேந்தன்குடி, குளமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட பல கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மற்றும் தைலமரக்காடுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இதனால் பலமரக்காடுகளில் இருந்த முயல், மான், மயில்கள், குருவிகள், பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. தற்போது தைலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மரக்காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தக் காடுகளில் வன உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தக் காடுகளில் உள்ள மான் போன்ற உயிரினங்கள் தண்ணீர் தேடி வெளியிடங்களுக்குச் செல்லும் போது நாய்களால் கடித்து குதறப்படுகிறது. அதேபோல தண்ணீர் தேடி சாலையைக் கடக்க முயலும்போது வாகனம் மோதி பலியாகிறது. இதேபோல புதுக்கோட்டை  மாவட்டத்தில் திருமயம், கீரமங்கலம் என மாவட்டம் முழுவதும் பல விபத்து சம்பவங்களில் மான்கள், மயில்கள் போன்ற உயிரினங்கள் பலியாகி வருகிறது. இதேபோல வியாழக்கிழமை கீரமங்கலம் பகுதியில் இருந்து தண்ணீர் தேடிச் சென்ற ஒரு மான் திசை மாறி பேராவூரணி பக்கம் சென்றுள்ளது. அந்த மானை பொதுமக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஆகவே, கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் காடுகளில் சுற்றித்திரியும் பறவைகள், வன உயிரினங்களுக்கு இரையும், தண்ணீரும் கிடைக்காமல் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வரும் மயில், மான் போன்றவற்றை நாய்கள் கடிப்பதும், விபத்துகளில் சிக்கி பலியாவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால்  ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் சில இடங்களில் கோடைக்காலம் முடியும் வரை தண்ணீர் தொட்டிகள் அமைத்து வன உயிரினங்களைப் பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காமல் இப்படி வெளியில் வந்து விபத்துகளில் சிக்கி பலியாகிறது. ஆகவே வனத்துறை தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். கோடை வெயிலில் தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைப்பது போல வன உயிரினங்களின் தாகம் தீர்க்கவும் உயிர் காக்கவும் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்கின்றனர் இளைஞர்களும் விவசாயிகளும்.

மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது சில நாட்கள் தண்ணீர் வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தண்ணீர் வைத்து பராமரிப்பு செய்யவில்லை. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் JJ வடிவத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் கூட தண்ணீர் இல்லை. வனவிலங்குகளை காக்க தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.