Advertisment

வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நட்சத்திர ஆமை!

Star tortoise handed over to the forest department

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தில் மன்னார் கோவில் அருகே மலைப் பகுதியையொட்டி தேவராஜ் என்பவரது விவசாய நிலம் உள்ளது. இன்று காலை தேவராஜ் அவர்களுடைய மகன் இராஜசேகர் தங்களது வயலில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயத்திற்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த போது வாய்க்காலில் அரிய வகை நட்சத்திர ஆமை வந்தது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பாலுசாமி மூலம் பெரம்பலூர் மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் வனக்காப்பாளர் அன்பரசு, வனக்காவலர் சசிக்குமாரிடம் பிடிபட்ட அரிய வகை நட்சத்திர ஆமை ஒப்படைக்கப்பட்டது.

Advertisment

Coimbatore Forest Department Tortoise
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe