Skip to main content

கரோனா பெயரில் மற்ற நோயாளிகளை அனுமதிக்காத ஸ்டான்லி மருத்துவமனை ..! அலட்சியத்தால் ஏற்பட்ட உயிர் பலி..!

Published on 06/07/2020 | Edited on 06/07/2020
The Stanley Hospital, which does not allow other patients in the name of Corona ..!

 

சென்னையில் குடிபோதையில் தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு கரோனாவை காரணம்காட்டி, முதலுதவி சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டவர் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

கடந்த ஜூன்.30-ஆம் தேதி சென்னை, மகாகவி பாரதி நகர் குடியிருப்பு 19ஆவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ஸ்டெல்லா(57). இவரது மகன்கள் ஜான்சன்(36), ஜான்(33) திருமணமாகாத இவர்கள், குடிபோதைக்கு அடிமையான இருவரும் வேலை வெட்டிக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வது வழக்கம். இதேபோன்று கடந்த ஜூன் 28 ஆம் தேதி, இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜான்சன் தனது சகோதரன் ஜானின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஜானின் அலறல் சத்தம் கேட்டு மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த ஸ்டெல்லா ஓடிவந்து பார்த்தபோது, ஜான் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடுவதை கண்ட  அவர், கூச்சலிட்ட தைக்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் 108 அவசர ஊர்தியின் உதவியோடு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு வயிற்றில் தையல் போட்டு முதலுதவி சிகிச்சை அளித்த, மருத்துவர்கள் கரோனா நோயாளிகள் அதிக அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை காரணம்காட்டி மேற்படி சிகிச்சைகாக ஜானை அனுமதிக்காமல் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மறுநாள் பார்த்தபோது சிகிச்சை பலனின்றி ஜான் தனது வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்காமல் கரோனா நோயாளிகளை காரணம் காட்டி மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பியதால் ஜான் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே குடிபோதையில் தனது சகோதரனை கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் ஜான்சனை கைது செய்த எம்கேபி நகர் காவல்துறையினர் குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதேபோல கரோனாவை காரணம் காட்டி பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் தவிர்த்துவருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ஆர்.எம்.ஓ. ரமேஷை தொடர்புக்கொண்டோம், “அந்த மாதிரியெல்லாம் இல்லை, அப்படி அவர் இறந்திருந்தால் இங்கு மருத்துவம் பார்த்த ஓ.பி. சீட்டை எடுத்துவரவும்'' என்று அலட்சியமாக தொடர்பை துண்டித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.