Skip to main content

கரோனா பெயரில் மற்ற நோயாளிகளை அனுமதிக்காத ஸ்டான்லி மருத்துவமனை ..! அலட்சியத்தால் ஏற்பட்ட உயிர் பலி..!

Published on 06/07/2020 | Edited on 06/07/2020
The Stanley Hospital, which does not allow other patients in the name of Corona ..!

 

சென்னையில் குடிபோதையில் தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு கரோனாவை காரணம்காட்டி, முதலுதவி சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டவர் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

கடந்த ஜூன்.30-ஆம் தேதி சென்னை, மகாகவி பாரதி நகர் குடியிருப்பு 19ஆவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ஸ்டெல்லா(57). இவரது மகன்கள் ஜான்சன்(36), ஜான்(33) திருமணமாகாத இவர்கள், குடிபோதைக்கு அடிமையான இருவரும் வேலை வெட்டிக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வது வழக்கம். இதேபோன்று கடந்த ஜூன் 28 ஆம் தேதி, இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜான்சன் தனது சகோதரன் ஜானின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஜானின் அலறல் சத்தம் கேட்டு மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த ஸ்டெல்லா ஓடிவந்து பார்த்தபோது, ஜான் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடுவதை கண்ட  அவர், கூச்சலிட்ட தைக்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் 108 அவசர ஊர்தியின் உதவியோடு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு வயிற்றில் தையல் போட்டு முதலுதவி சிகிச்சை அளித்த, மருத்துவர்கள் கரோனா நோயாளிகள் அதிக அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை காரணம்காட்டி மேற்படி சிகிச்சைகாக ஜானை அனுமதிக்காமல் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மறுநாள் பார்த்தபோது சிகிச்சை பலனின்றி ஜான் தனது வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்காமல் கரோனா நோயாளிகளை காரணம் காட்டி மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பியதால் ஜான் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே குடிபோதையில் தனது சகோதரனை கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் ஜான்சனை கைது செய்த எம்கேபி நகர் காவல்துறையினர் குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதேபோல கரோனாவை காரணம் காட்டி பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் தவிர்த்துவருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ஆர்.எம்.ஓ. ரமேஷை தொடர்புக்கொண்டோம், “அந்த மாதிரியெல்லாம் இல்லை, அப்படி அவர் இறந்திருந்தால் இங்கு மருத்துவம் பார்த்த ஓ.பி. சீட்டை எடுத்துவரவும்'' என்று அலட்சியமாக தொடர்பை துண்டித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.