Skip to main content

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்... சர்வாதிகார போக்கு... ஸ்டாலின் கண்டனம்!

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

நடக்க இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தலை நடத்த அவசர சட்டத்தைப் பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பேசுகையில்,

 

Stalin's condemnation to   indirect mayoral election

 

உள்ளாட்சி தேர்தலில் மேயர் தேர்தலை மறைமுகமாக நடத்தலாம் என்று நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசப்பட்டதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இன்று மதியம் துணை முதல்வர் ஓபிஎஸ் அப்படியெல்லாம் எதுவும் பேசவில்லை. அப்படி இருந்தால் உங்களை அழைத்து நாங்களே சொல்வோம் என்று தெளிவாக சொல்லிவிட்டு போயிருக்கிறார்.

ஆனால் இன்று மாலையே அதற்கான ஆர்டினன்ஸ் போடப்பட்டு இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் இதை ஒரு சர்வாதிகாரத்தோடு ஜனநாயகம் பாதுகாக்க முடியாத சூழ்நிலையில் இந்த தேர்தலை நடத்துவதற்காக அதிமுக திட்டமிட்டிருக்கிறது என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது. இதை சொன்னால் உங்களுடைய ஆட்சியிலும் நடத்தவில்லையா என்ற கேள்வியை கேட்பார்கள். உண்மைதான் நடத்தினோம் இல்லை என்று சொல்லவில்லை.

அன்று இருந்த அரசியல் சூழ்நிலை வேறு, அதுமட்டுமில்லாமல் அதனால் உள்ளாட்சி அமைப்புகளில் சுதந்திரமாக பணியாற்ற முடியாத சூழ்நிலை உருவாகிவிடும் என இருந்தது. அதனால்தான் மீண்டும் அதை மாற்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய மாநகராட்சி மேயராக இருந்தாலும் சரி, நகராட்சி தலைவர்களாக இருந்தாலும் சரி, பேரூராட்சி தலைவராக இருந்தாலும் சரி அந்த அடிப்படையில் நடத்துவதுதான் சிறப்பாக இருக்கும். இது கண்டிக்கத்தக்கது என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.