நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக, திமுக, நாம் தமிழர் ஆகிய அரசியல் கட்சிகள் பிரச்சார களத்தில் இறங்கியுள்ளன.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரி களக்காட்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
ஜெ.மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியவர் ஓபிஎஸ். ஜெயலலிதாவுக்கான சிகிச்சைபற்றி முறையாக தெரிவிக்காமல் பின்னர் மரணத்தில் மர்மம் இருப்பதாககூறினார் ஓபிஎஸ் என கூறிய அவர்,அரசியலுக்கு அப்பாற்பட்டு கலைஞர் சொன்னதன் பேரில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலிசெலுத்தியதாகவும் கூறினார்.