நெல்லையில் முன்னாள் திமுக பெண் மேயர் உமாமகேஸ்வரி மற்றும் அவரது கணவர், வீட்டில் வேலை செய்யும் பணிபெண்ஆகிய 3 பேரும்இன்று மதியம் மர்ம நபர்களால் கொடூரமாககொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்
அந்த அறிக்கையில், நெல்லை மாநகர முதல் பெண் மேயர் என்ற பெயரை பெற்று அந்தபதவிக்கும்,எளிமைக்கும்இலக்கணமாக விளங்கியவர் உமா மகேஸ்வரி. திமுகமாவட்ட மகளிரணி தலைவரானஉமா மகேஸ்வரியின் மறைவுதிமுக விற்கு பேரிழப்பாகும்.
திமுக முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தகொலை சம்பவத்தில் தொடர்புடையகுற்றவாளிகளை உடனே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.