style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
பாஜகவிற்கு எதிராக மாபெரும் கூட்டணி அமைப்பதற்கான ஆலோசனைகூட்டம் நாளை டெல்லியில் நடக்கவிருக்கிறது. நாளை நடக்கவிருக்கும் இந்தகூட்டத்தில் பங்குகொள்ள இன்று காலை டெல்லி புறப்பட்டதிமுக தலைவர் ஸ்டாலின் தற்போது அகில இந்திய காங்கிரஸின் மூத்த தலைவரான சோனியா காந்தியை நேரில் சந்தித்துள்ளார்.
இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், நாளை நடக்கவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் மேலும் சோனியா காந்தியை சந்தித்து மேகதாது அணை பிரச்சினை பற்றி பேச இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இந்த சந்திப்பு நடைபெற்றுவருகிறது.
இந்த சந்திப்பின் பொழுதுதிமுக மகளிர் அணி செயலாளர்கனிமொழி, டிஆர் பாலு, ஆ.ராசா ஆகியோர் உடன்சென்றுள்ளனர்.