Skip to main content

தமிழகத்தில் கொலைகார கும்பலின் ஆட்சி நடக்கிறது! ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் காட்டம்

Published on 31/01/2019 | Edited on 31/01/2019

 


தமிழகத்தில் கொலைகார கும்பலின் ஆட்சி நடப்பதாக ஓமலூர் அருகே நடந்த ஊராட்சிசபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 

நேற்று சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள பாகல்பட்டியில் திமுக சார்பில் ஊராட்சிசபைக் கூட்டம் நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், பாகல்பட்டி சுற்றுவட்டாரத்தில் நிலவும் அடிப்படை பிரச்னைகள் குறித்து பெண்களிடம் கேட்டறிந்தார். ஜெயசித்ரா, ஜெயா, கலைவாணி, ஆயாபொண்ணு, சாந்தி, கலையரசி, பிரதீபா உள்பட 25 பெண்கள் முதியோர் உதவித்தொகை, மின் இணைப்பு, சாக்கடை கால்வாய் வசதி, போக்குவரத்து வசதி, கல்விக்கடன் ரத்து, பால் கொள்முதல், மருத்துவ உதவி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

 

stalin

 

இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசியது: ஐந்து முறை முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி பல திட்டங்களை நிறைவேற்றி கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார். 

 

இதேபோல் 7 ஆயிரம் கோடி விவசாய கடன்களை பதவியேற்ற மேடையிலேயே ரத்து செய்தார். நெசவாளர் மற்றும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். ஆனால் இந்த ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை. 

 

நான் 1989ல் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது பல மணிநேரம் நின்று மகளிருக்கு சுழல்நிதி, வங்கிக்கடன் ஆகியவற்றை வழங்கினேன். ஆனால் தற்போது சுய உதவிக்குழுக்கள் அநாதையாக்கப்பட்டு உள்ளன.

 

stalin

 

தமிழகத்தின் ஆட்சி ஐசியூவில் கோமா நிலையில் உள்ளது. கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன் ஆகியவைதான் இந்த ஆட்சிக்கு முக்கியமானதாக உள்ளது. இந்தியாவிலேயே கொலைகார ஆட்சி என்றால் முதலிடம் இந்த ஆட்சிக்குதான் கிடைக்கும்.

 

ஜெயலலிதா வாழ்ந்த கொடநாட்டிலேயே ஐந்து கொலைகள் செய்யப்பட்டு உள்ளன. அங்கிருந்த ஆவணங்கள், பணம் ஆகியவற்றை எடுக்க இந்த கொலைகள் நடந்துள்ளன. வெளியே தெரிந்து விடும் என பயந்து கார் டிரைவர் கனகராஜ் மற்றும் கூலிப்படையை சேர்ந்த சயான், குடும்பத்தினரை திட்டமிட்டு கொன்றுள்ளனர். இதை தெகல்கா ஆசிரியர் வெளிக்கொண்டு வந்தார்.

 

இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க நீதிமன்றத்தை முதல்வர் நாடினார். ஆனால் முறையாக விசாரணை நடத்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

ஒரு கொலைகார ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. கொள்ளையடிப்பதில் எடப்பாடியையே முந்திவிட்டார் அமைச்சர் வேலுமணி. இதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

தடை செய்யப்பட்ட குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிக்கியுள்ளார். இவர் மீது விசாரணை நடத்திய டிஜிபியும், இந்த வழக்கில் சிக்கியுள்ளார். கிரிமினல் கேபினட், கொள்ளை கேபினட், கொலைகார கேபினட் செய்யும் ஆட்சியை அகற்றுவதுடன் அதற்கு துணை நிற்கும் மோடியையும் ஓட ஓட விரட்ட, வரும் தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

 

மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை நானே அதிகாரிகளிடம் கொடுப்பேன். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.