Published on 09/12/2018 | Edited on 09/12/2018
மதவாத ஆட்சிக்கு முடிவுகட்டும் வகையில் கூட்டணி அமையும் எனக் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு மாநிலக் கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் திமுக சார்பாக நான் பங்கேற்கிறேன். மதவாத ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் கூட்டணி அமையும். சோனியா அவர்களை சந்திக்கும் பொழுது மேகதாது விவகாரம் குறித்து பேசுவேன் என கூறினார்.