Skip to main content

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் முதன்முறையாக ஸ்டாலின்...!

Published on 11/09/2019 | Edited on 11/09/2019

இமானுவேல் சேகரனாரின் நினைவு தினம் இந்த வருடம் மட்டும் ஸ்பெஷலானது. இந்த வருடம் செப்டம்பர் 11 அன்று நினைவுத்தினத்தன்று கட்சியின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த பேருவகை அடைந்துள்ளனர் தேவேந்திரகுலமக்கள்.

 

Stalin for the first time in Emanuel Sekaran s memorial


கடந்த சிலவருடங்களாக நடைபெற்றதைப் போல், இந்த வருடமும் இமானுவேல் சேகரனின் 62வது நினைவு நாளிற்கு வாடகை வாகனத்தில் வரக்கூடாது, ஜோதி எடுத்து வரக்கூடாது என்று வழக்கம் போல் இராமநாதபுரம் மாவட்டம் முழுமைக்கும் 144 தடையுத்தரவை அமல்படுத்தியது மாவட்ட காவல்துறை. மாவட்டத்தில் பல இடங்கள் பிரச்சனைக்குரிய பகுதியாகவும், தடைசெய்யப்பட்ட வழித்தடங்களையும் கண்டறியப்பட்டு 200க்கும் அதிகமான இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டும், கூடுதல் ஏ.டி.ஜி.பி.ஜெயந்த் முரளி தலைமையில் ஐ.ஜி, 6 டி.ஐ.ஜி-க்கள் ,18 எஸ்.பி-க்கள் ,18 ஏ.டி.எஸ்.பி-க்கள் ,44 டி.எஸ்.பி-க்கள் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் உள்பட மாவட்டம் முழுமைக்கும் 4500 போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.  

 

Stalin for the first time in Emanuel Sekaran s memorial

 

இதே வேளையில்,  காலை 8:30 மணி - 9 மணி - அதிமுகவிற்கும்,  காலை 9மணி - 9: 30 மணி- தேமுதிகவிற்கும், காலை 9:30 மணி - 10 மணி- திமுகவிற்கும், காலை 10 மணி - 10:30 மணி- இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும், காலை 10:30 மணி - 11மணி - விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், காலை 11மணி - 11:30 மணி- பாஜகவிற்கும், காலை 11:30 மணி - 12 மணி அமமுகவிற்கும், பகல் 12மணி - 12:30 மணி - பகுஜன் சமாஜ் கட்சிக்கும், பகல் 12:30 மணி - 1 மணி - மதிமுகவிற்கும், பகல் 2மணி - 2:30 மணி- தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கும், மாலை 3 மணி - 3:30 மணி-புதிய தமிழகம் கட்சிக்கும் பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பதிவு செய்யப்பட்ட கட்சி பிரதிநிதிகளுக்கு நேர ஒதுக்கீட்டையும் குறிப்பிட்டது மாவட்ட நிர்வாகம்.

அதிகாலையிலேயே அருகிலுள்ள ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தி துவக்கி வைக்க, அதிமுக சார்பில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி ஆகியோர் நினைவு அஞ்சலி செலுத்த, திமுக சார்பில் கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி. சுப.தங்கவேலன். தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் நினைவு அஞ்சலி செலுத்தினர்.

 

Stalin for the first time in Emanuel Sekaran s memorial

 

அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், " தியாகி இம்மானுவேல் சேகரனார்  தீண்டாமை ஒழிப்புக்காக பாடுபட்டவர். இந்திய ராணுவத்தில் பணி புரிந்தவர். 1950 விடுதலை இயக்கத்தில் பங்கேற்றவர். 1954 ல் தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்தியவர். அவரது புகழ் ஓங்கி ஒலிக்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தி இருக்கிறோம். அவரது நினைவு நாள் குரு பூஜையை அரசு விழாவாக கொண்டாடுவீர்களா? எனக் கேட்கிறீர்கள். இது ஆட்சியாளர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி. நீங்கள் கேட்கும் இந்தக் கேள்வியில் இருந்து அடுத்து ஆட்சிக்கு வரப் போவது திமுகதான் என உணர்த்தி இருக்கிறீர்கள்." என்றார் அவர்.

ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தங்களது சார்பாக பிரதிநிதிகளை அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் வேளையில், முதன்முறையாக தானே நேரடியாக வந்து இமானுவேல் சேகரனாருக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலினை ஆர்வமுடன் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர் பரமக்குடி மக்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.