Advertisment

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை திண்டுக்கல் வருகை!

st

திமுக ஊராட்சி சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகிறார்.தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்று வருகிறார்கள். அதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளபட்டியில் ஊராட்சி சபை கூட்டம் நாளை நடக்கிறது. அதனை தொடர்ந்து நிலக்கோட்டையில் வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மு. க. ஸ்டாலின் வருகிறார். இதையொட்டி கொடைரோடு பயணிகள் விடுதியில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டமும் நடந்தது. இக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் அன்பழகன், மணிகண்டன், மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் மாயாண்டி, செல்வராஜ். அம்மையநாயக்கனூர் பேரூர் செயலாளர் செல்வராஜ், நிலக்கோட்டை பேரூர் செயலாளர் கருணாநிதி உள்பட கட்சி பொறுப்பில் உள்ள பலர் கலந்து கொண்டனர்.

Advertisment
stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe