Skip to main content

இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆதரவு கொடுங்கள்! தேனி ஊராட்சி சபை கூட்டத்தில் திமுகவினர் வலியுறுத்தல்! 

Published on 12/01/2019 | Edited on 12/01/2019
sakthi

 

கிராமங்களில் ஊராட்சி சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
 

தேனி மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கம்பம் ராமகிருஷ்ணன், ஓபிஎஸ் தொகுதியான தேனி ஒன்றியத்திலுள்ள அரண்மனை புதூர். கொடுவிலார்பட்டி. நாகலாபுரம். உப்பார்பட்டி. தப்புக்கொண்டு, காட்டுநாயக்கன்பட்டி என எட்டு ஊராட்சிகளிலும் ஊராட்சி சபைக் கூட்டத்தை நடத்தி வருகிறார்.
 

தேனி ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி பாகுபாடு பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களும் விவசாயிகளும் பெருந்திரளாக கலந்துகொண்டு எங்கள் பகுதியில் குடிநீர், சாக்கடை, கழிப்பறை போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. பெயருக்குத்தான் துணை முதல்வர் தொகுதியாக இருக்கிறது. நீங்கள்தான் எங்கள் கோரிக்கைகளை கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் எனக் கூறி தாங்கள் கொண்டு வந்த மனுக்களை எல்லாம் கம்பம் ராமகிருஷ்ணனிடம் கொடுத்தனர்.
 

அதுபோல் ஒவ்வொரு ஊரிலும் 25க்கும் மேற்பட்ட முதியோர்கள் உதவித்தொகை கிடைக்காமலும் அதை வாங்கி கொடுக்க கோரியும் மனு கொடுத்தனர். அதை  பெற்றுக்கொண்ட கம்பம் ராமகிருஷ்ணனோ, உள்ளாட்சித் தேர்தல் நடத்தியிருந்தால் அந்தந்த பகுதியில் உள்ள தலைவரிடமும், வார்டு மெம்பர்கள் மூலமும் உங்கள் குறைகளை சொல்லி நிவர்த்தி செய்து இருக்கலாம்.
 

அதனாலதான் தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலை நடத்த சொல்லி வலியுறுத்தி வருகிறார். அப்படி இருந்தும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இந்த அரசு முன்வரவில்லை என்பதால் தான் ஊராட்சி சபை கூட்டத்தை போட்டு மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய  சொல்லி இருக்கிறார்.
 

அதன் அடிப்படையில்தான் நாங்கள் ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி வருகிறோம். தற்பொழுது நீங்கள் கொடுக்கப்பட்ட மனுக்களை எல்லாம் நானே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உங்கள் குறைகளை நிவர்த்தி செய்கிறேன் என்று உறுதி அளித்தார்.
 

அதன்பின் மாவட்ட பொறுப்பாளரான கம்பம் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளரான சக்கரவர்த்தி உள்பட பொறுப்பில் உள்ள சில உபிகளும் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கும்.  வீடுகளுக்கும் சென்று மக்களை சந்தித்து ஊராட்சி சபையின் பிட் நோட்டீஸ்களை  கொடுத்து உங்களுடைய கோரிக்கை எல்லாம் கூடிய விரைவில் ஸ்டாலின் முதல்வராக வந்தவுடன் நிறைவேற்றி கொடுப்பார்.
 

இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆதரவு கொடுங்கள். வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு நீங்கள் வாக்களிப்பதின் மூலம் தான் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டி, அதன்மூலம் உள்ளாட்சி தேர்தலும் நடக்கும் உங்கள் கோரிக்கைகளும் குறைகளையும் நிவர்த்தி செய்து கொடுக்கப்படும் என வாக்காளர்களிடம் ஊராட்சி சபைக்கூட்டம் மூலம் வலியுறுத்தி வருகிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஐ. பெரியசாமி!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I.Periyasamy who collected votes in the traditional manner

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் முருகபவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது. அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, “மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம். நாம் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்போம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சச்சிதானந்தம் எம்.பி. ஆகிறார்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

அதை தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பேசுகையில், “இது புறாவிடு தூது அல்ல... இந்த புறா டெல்லி வரை பறந்து சென்று வரும். புறாவை டெல்லிக்கு அனுப்பி நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருமா? என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த புறாவை பறக்க விட்டு நமது பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார். 

Next Story

“திண்டுக்கல் தொகுதி இந்திய அளவில் முதலிடத்தில் வரவேண்டும்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
"Dindigul Constituency should come first in India" Minister Chakrapani

திண்டுக்கல் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ஆர். சச்சிதானந்தத்தை ஆதரித்து ஒட்டன்சத்திரம் தொகுதிக்குப்பட்ட அரங்கநாதபுரம், லெக்கையன்கோட்டை, சாலைபுதூர் சத்தியநாதபுரம், கே. அத்திகோம்பை, காளாஞ்சிபட்டி வெரியபூர், பழையபட்டி, திப்பம்பட்டி, கேதையூறும்பு, புலியூர்நத்தம், பி.என். கல்லுப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, குளிப்பட்டி, ஜவ்வாது பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் சிலிண்டர் ரூ.5 00க்கும், பெட்ரோல் ரூ. 75க்கும், டீசல் ரூ.65க்கும் வழங்கப்படும். 100 நாள் வேலைத்திட்ட சம்பளம்  ரூ. 400 ஆக உயர்த்தப்படும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி எம்.பி. வேலுச்சாமி, 5 லட்சத்து 50 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று தமிழகத்தில் முதல் இடத்தையும், இந்திய அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். இந்த தேர்தலில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி அதிக வாக்குகளை பெற்று இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்ற தொகுதியாக திண்டுக்கல் தொகுதி இடம் பெற வேண்டும்” என்று பேசினார்.