Skip to main content

'கலைஞரின் முடிவுக்கு மகுடம் சூட்டிவிட்டார் ஸ்டாலின்''-மனோன்மணியம் சுந்தரனார் குடும்பத்தினர் நன்றி!

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

       

'Stalin crowned to kalaingar '- Manonmaniyam Sundaranar Family Thank

 

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலான மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்" எனும் பாடலை கடந்த 17-ம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்ததோடு அந்த பாடல் தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுஅமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். மேலும் இசைத்தட்டுக்களை கொண்டு இசைப்பதைத் தவிர்த்து கண்டிப்பாக பயிற்சி பெற்றவர்களை கொண்டு வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும். அதேவேளையில் மாற்றுத்திறனாளிகளைத் தவிர்த்து மற்றவர்கள் கண்டிப்பாக எழுந்து நிற்க வேண்டும் என நெறிமுறைகளை வகுத்து அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்தார்.

 

'Stalin crowned to kalaingar '- Manonmaniyam Sundaranar Family Thank

 

இதற்கு தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும், தமிழ்ச்சங்கங்களும், பொதுமக்களும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கும் நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வசிக்கும் மனோன்மணியம் சுந்தரனாரின் மகன் பி.எஸ்.நடராஜபிள்ளையின் மகள் மனோகரத்தின் மகனான பேரன் பேராசிாியர், முனைவர் எஸ்.மோதிலால் நேரு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நக்கீரன் இணையதளம் வழியாக நன்றியும், மகிழ்ச்சியும் தொிவித்துள்ளார்.

 

'Stalin crowned to kalaingar '- Manonmaniyam Sundaranar Family Thank

 

இதுகுறித்து அவர் நம்மிடம் கூறும்போது, திருவிதாங்கூரின் துறைமுக பட்டணமான ஆலப்புழையில் 1855 ஏப்ரல் 5-ம் தேதி பிறந்த சுந்தரனார் பள்ளிப்படிப்பை ஆலப்புழையில் தமிழ் பாடசாலையில் துவங்கினார். இலக்கியங்களில் காணப்படும் கடவுள் வாழ்த்து பாடலுக்கு பதிலாக இயற்கையை வணங்கினார் சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகள். அந்த சேர நாட்டைச் சார்ந்த மனோன்மணியம் சுந்தரனார் தமிழ் மொழியைத் தாயாக வணங்கி தமிழ்த்தாய் வணக்கம் பாடலை பாடினார். இலக்கியங்களில் முதல் முறையாக தமிழை அல்லது ஒரு மொழியைத் தெய்வமாக வணங்கும் பாடலை எழுதியவர் மணோன்மணியம் சுந்தரனார். இதன் சிறப்பை உணர்ந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் 1970 மார்ச் 11-ம் தேதி தமிழக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் இறைவணக்கம் என்பது தமிழ்த்தாய் வாழ்த்தாக இருக்குமென்றும் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்" பாடலை வாழ்த்து பாடலாக அறிவித்தார். அதோடு நெல்லை பல்கலைக்கழகத்துக்கு மனோன்மணியம் சுந்தரனார் என பெயர் வைத்தவர், மனோன்மணியம் சுந்தரனாரின் பாடல் ஒரு மொழி வாழ்த்துப் பாடல் மட்டுமே அதற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடவில்லை என்று பலசர்ச்சைகள் வந்த வேளையில், தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தந்தையார் எடுத்த முடிவுக்கு மகுடம் சூட்டும் விதமாக சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநில பாடலாக அறிவித்து அதற்கு சில முக்கிய நெறிமுறைகளையும் வகுத்திருப்பது மனோன்மணியம் சுந்தரனாரின் பெயர் காலம் கடந்தாலும்  நிலைத்து நிற்கும் அளவுக்கு செய்துவிட்டார்.

 

அந்த பெருமையை கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனோன்மணியம் சுந்தரனாரின் பேரன் என்ற முறையில் எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.