சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, " திமுக எம்எல்ஏக்கள் பத்து பேர் தங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்" என்று தெரிவித்திருந்தார். இதற்கு உடனடியாக பதிலளித்த திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ''50 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களோடு தொடர்பில் இருக்கிறார்கள். அதிமுகவின் 30 மாவட்டச் செயலாளர்கள், இரண்டு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர் அந்த 10 பேருடைய பட்டியலை வெளியிட்டால் நாங்கள் இந்த பட்டியலை வெளியிட தயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.
இதற்கிடையே இன்று இதுதொடர்பாக பேசிய தமிழக முதல்வர், " அதிமுகவைத் தொடர்பு கொண்டு நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களே அவரிடம் பேசுவதில்லை. இந்த நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பற்றி அவர் பேசுவது வியப்பாக இருக்கிறது" என்றார்.