Skip to main content

ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைக்கு உணவு, உடை வழங்கிய எம்.எல்.ஏ.!

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

பாராளுமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளைக் கொண்டாடாமல் 40 தொகுதிகளையும் கழக உடன்பிறப்புகள் வெற்றிபெற்றுக் கொடுத்தால் அதை எனது பிறந்தநாள் பரிசாக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி பிறந்தநாளை கொண்டாடவில்லை ஸ்டாலின்.

 

இருந்தாலும் அங்கங்கே உள்ள உடன்பிறப்புக்கள் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் முடிந்த அளவுக்கு ஏழைபாழைகளுக்கு உதவி செய்தும் வருகிறார்கள்.

 

stalin birthday celebration in dinducul

 

அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்கு மாவட்ட செயலாளரும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணி தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள தொப்பம்பட்டி மேற்கு ஒன்றியத்தில் இருக்கும் கீரனூர் குருகுலத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு அறுசுவை உணவுகளையும்,உடைகளையும் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கினார். அதைக்கண்டு குருகுலத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் பூரித்துப் போய் விட்டனர்.

 

stalin birthday celebration in dinducul

 

இதில் மாவட்ட துணைச் செயலாளர் இராஜாமணி, தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள்   காதர்பாட்சா, வெங்கிடுசாமி, ஒன்றிய பொருளாளர் நாச்சிமுத்து , மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சின்னசாமி, கீரனூர் பேரூர் பொறுப்பாளர் கருப்புசாமி, கீரனூர் உறுமன், பெரிச்சிபாளையம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சாமிதுரை,  தும்பலப்பட்டி தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தண்டபாணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பொன்ராஜ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் நாகராஜன், மாவட்ட கலை இலக்கியபகுத்தறிவு பேரவை அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிவேல், தொப்பம்பட்டி ஊராட்சி செயலாளர் ராமராஜ், மரிச்சிலம்பு ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன்,  மேல்கரைபட்டி ஊராட்சி செயலாளர் கருப்புச்சாமி, மிடாப்பாடி ஊராட்சி செயலாளர் ராமசாமி, புஷ்பத்தூர் ஊராட்சி செயலாளர் பொன்னுச்சாமி, தாளையூத்து ஊராட்சி செயலாளர் தங்கவேல், தும்பலப்பட்டி ஊராட்சி செயலாளர் கதிரேசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ்குமார், ஒன்றிய வர்த்தகர் அணி அமைப்பாளர் கிருஷ்ணசாமி, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் செல்வராஜ், ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்லத்துரை, கீரனூர் பேரூர் மாணவரணி அமைப்பாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.