வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தமிழகத்தில் சூடு பிடித்திருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை,தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என களத்தில் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. அதேபோல்தேர்தல் ஆணையம்சார்பிலும்தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான தீவிரஆலோசனைகள் சூடுபிடித்துள்ளன.
சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர், பிப்ரவரி 17- ஆம் தேதி(நேற்று) முதல் விருப்ப மனு அளிக்கலாம். பிப்ரவரி 17- ஆம் தேதி முதல் பிப்ரவரி 24- ஆம் தேதி வரை தி.மு.க.வினர் விருப்ப மனு அளிக்கலாம் எனதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படிநேற்றுசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவிருப்ப மனு வழங்கும் பணி தொடங்கியது. இந்நிலையில் தேனிமாவட்டம் உத்தமபாளையத்தில் நடைபெற்றதேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசியதிமுகதலைவர் ஸ்டாலின், திமுகமாநிலமாநாடு வரும் மார்ச் 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார்.