திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அனைத்துக்கட்சி தலைவர்களும் நேரில் வந்து நலம் விசாரித்து செல்கின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் கலைஞரின் நலம் குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பியிடம் பிரதமர் நரேந்திரமோடி தென்னாப்பிரிக்காவில் இருந்து தொலைபேசி மூலம் விசாரித்தார். இதை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், கலைஞரின் உடல்நலம் விரைவில் குணமடைந்து வர பிரார்த்திப்பதாகவும், கலைஞருக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய தயார் என்றும்டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.