தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழிசை சௌந்தரராஜனுக்குதிமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தெலுங்கான ஆளுநராக நியமிக்கப்பட்ட அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அன்பு சகோதரி தமிழிசை அடித்தட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்டு அரசியல் சட்ட மாண்புகளை அவர் பாதுகாப்பார் என நம்புகிறேன் என டுவிட்டரிலும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதேபோல் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அன்பு மகள்தமிழிசைக்கு வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசைநியமிக்கப்பட்டதற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிஜயகாந்த் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்!