உலகம் முழுவதும் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,761 ஆக உள்ள நிலையில், உயிரிழப்பு 206 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, இந்த கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தேவையின்றி பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisment

இதனால், நாடு முழுவதும் சாலைகள் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த சூழலை பயன்படுத்தி சில பழுதடைந்த முக்கிய சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை, ரிசர்வ் வங்கி அருகில் உள்ள சுரங்க பாலம் ஒன்று பழுதடைந்திருந்த நிலையில், இன்று(10.04.2020) அந்த பாலத்தை சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்துவருகிறது.