தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்புகள் ரேஷன் கடை மூலமாக வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன் கடைகளில் இலவசமாக வழங்க கரும்புகள் வாங்கப்பட்டு அனைத்து கடைகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கான டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணியும் மற்றும் பொருட்கள் தயார்ப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. புரசைவாக்கம் பகுதியில் உணவுப் பொருட்கள் கிடங்கிலிருந்துஅதிகாரிகள் பொங்கல் பொருட்களை ரேசன் கடைகளுக்கு அனுப்பினர்.