Skip to main content

காவலர் வில்சன் கொல்லப்பட்டதன் பின்னணி என்ன? - தனிப்படை எஸ்.பி. விளக்கம்...!

Published on 17/01/2020 | Edited on 17/01/2020

கடந்த 8-ம் தேதி இரவு 8.30 மணிக்கு களியக்காவிளை சந்தைவழி போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற திருவிதாங்கோடு அப்துல் சமீம், இளங்களைட தௌபீக் இருவரையும் எஸ்.பி ஸ்ரீநாத் தலைமையிலான 10 தனிப்படைகள், கியூ பிரிவு, உள்பாதுகாப்பு பிரிவு போலீஸார் கேரளா போலீஸாருடன் இணைந்து தேடிவந்தனா்.

 

ssi-wilson-incident-SB explanation

 



இந்தநிலையில் குற்றவாளிகள் அப்துல் சமீம் முகத்தில் உள்ள தாடியை மழித்து விட்டும்,  தௌபீக் தலை முடியை முழுசா சிறியதாக வெட்டி விட்டும் மாறு வேடத்தில் கேரளா வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து வேராவல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தப்பி சென்றனா். பின்னா் கா்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த 14ஆம் தேதி கர்நாடக போலீஸ் கைது செய்தனர். பின்னர் அவர்கள் குற்றவாளிகள் இருவரையும் குமரி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து கடந்த 16-ம் தேதி குற்றவாளிகளை அதிகாலை களியக்காவிளை காவல் நிலையம் கொண்டு வந்த குமரி போலீஸ், அங்கு சாரியான பாதுகாப்புகள் இல்லாததால், பின்னர் குற்றவாளிகளை தக்கலை காவல்நிலையத்திற்கு மாற்றியது. பின்னா் அவா்களிடம் நெல்லை சரக டிஐஜி பிரவின் குமார், அபினவ், தனிப்படை எஸ்.பி ஸ்ரீநாத், புலன் விசாரணை அதிகாரியான டிஎஸ்பி கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

இதைத்தொடர்ந்து காவல் நிலையத்துக்கு அரசு மருத்துவரை வரவழைத்து அப்துல்சமீம் மற்றும் தௌபீக்கை பரிசோதனை செய்த பின் இரவு 9 மணிக்கு குழித்துறை மாஜிஸ்திரேட் கோட்டில் ஆஜா் படுத்திவிட்டு இரவு பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா். இருவரையும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

 

 ssi-wilson-incident-SB explanation

 



இந்த நிலையில் தனிப்படை எஸ்.பி ஸ்ரீநாத் கூறும் போது, "தமிழகத்தில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டியிருந்த நிலையில் டெல்லி, பெங்களூரில் அடுத்தடுத்து 6 தீவிரவாதிகளை போலீஸ் கைது செய்தனா். இவா்கள் எல்லாம் அப்துல் சமீம் மற்றும் தௌபீக்கின் கூட்டாளிகள். இதனால் அவா்களின் சதிதிட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனதாம்.

அதை பழிதீா்த்து கொள்ளும் விதமாக தான் களியக்காவிளை சோதனை சாவடியில் வில்சனை சுட்டுக்கொன்றுள்ளனர். தீவிரவாதிகள் சிறப்பு உதவி ஆய்வாளரை சுட்டுக்கொன்ற துப்பாக்கியை கைப்பற்ற வில்லை. போலீஸ் கஷ்டடியில் அவா்கள் இருவரையும் எடுக்க கேட்கபட்டுள்ளது. அதன்பிறகு  இவா்களின் இயக்கத்தை பற்றியும் அவா்களின் பின்னால் இருப்பவா்கள் பற்றியும் தெரியவரும்" என்று தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.