Skip to main content

காவலர் வில்சன் கொல்லப்பட்டதன் பின்னணி என்ன? - தனிப்படை எஸ்.பி. விளக்கம்...!

Published on 17/01/2020 | Edited on 17/01/2020

கடந்த 8-ம் தேதி இரவு 8.30 மணிக்கு களியக்காவிளை சந்தைவழி போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற திருவிதாங்கோடு அப்துல் சமீம், இளங்களைட தௌபீக் இருவரையும் எஸ்.பி ஸ்ரீநாத் தலைமையிலான 10 தனிப்படைகள், கியூ பிரிவு, உள்பாதுகாப்பு பிரிவு போலீஸார் கேரளா போலீஸாருடன் இணைந்து தேடிவந்தனா்.

 

ssi-wilson-incident-SB explanation

 



இந்தநிலையில் குற்றவாளிகள் அப்துல் சமீம் முகத்தில் உள்ள தாடியை மழித்து விட்டும்,  தௌபீக் தலை முடியை முழுசா சிறியதாக வெட்டி விட்டும் மாறு வேடத்தில் கேரளா வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து வேராவல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தப்பி சென்றனா். பின்னா் கா்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த 14ஆம் தேதி கர்நாடக போலீஸ் கைது செய்தனர். பின்னர் அவர்கள் குற்றவாளிகள் இருவரையும் குமரி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து கடந்த 16-ம் தேதி குற்றவாளிகளை அதிகாலை களியக்காவிளை காவல் நிலையம் கொண்டு வந்த குமரி போலீஸ், அங்கு சாரியான பாதுகாப்புகள் இல்லாததால், பின்னர் குற்றவாளிகளை தக்கலை காவல்நிலையத்திற்கு மாற்றியது. பின்னா் அவா்களிடம் நெல்லை சரக டிஐஜி பிரவின் குமார், அபினவ், தனிப்படை எஸ்.பி ஸ்ரீநாத், புலன் விசாரணை அதிகாரியான டிஎஸ்பி கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

இதைத்தொடர்ந்து காவல் நிலையத்துக்கு அரசு மருத்துவரை வரவழைத்து அப்துல்சமீம் மற்றும் தௌபீக்கை பரிசோதனை செய்த பின் இரவு 9 மணிக்கு குழித்துறை மாஜிஸ்திரேட் கோட்டில் ஆஜா் படுத்திவிட்டு இரவு பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா். இருவரையும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

 

 ssi-wilson-incident-SB explanation

 



இந்த நிலையில் தனிப்படை எஸ்.பி ஸ்ரீநாத் கூறும் போது, "தமிழகத்தில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டியிருந்த நிலையில் டெல்லி, பெங்களூரில் அடுத்தடுத்து 6 தீவிரவாதிகளை போலீஸ் கைது செய்தனா். இவா்கள் எல்லாம் அப்துல் சமீம் மற்றும் தௌபீக்கின் கூட்டாளிகள். இதனால் அவா்களின் சதிதிட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனதாம்.

அதை பழிதீா்த்து கொள்ளும் விதமாக தான் களியக்காவிளை சோதனை சாவடியில் வில்சனை சுட்டுக்கொன்றுள்ளனர். தீவிரவாதிகள் சிறப்பு உதவி ஆய்வாளரை சுட்டுக்கொன்ற துப்பாக்கியை கைப்பற்ற வில்லை. போலீஸ் கஷ்டடியில் அவா்கள் இருவரையும் எடுக்க கேட்கபட்டுள்ளது. அதன்பிறகு  இவா்களின் இயக்கத்தை பற்றியும் அவா்களின் பின்னால் இருப்பவா்கள் பற்றியும் தெரியவரும்" என்று தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.