Skip to main content

பாஜகவின் மரியாதைதான் ஒரே நாளில் தகர்ந்துபோயிருக்கிறது; ஜெயக்குமாரின் அறிவிலித்தனம்; சிவசங்கர் பதிலடி

Published on 13/04/2018 | Edited on 13/04/2018


 

Interview


''கோ பேக் மோடி'' (gobackmodi) என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது. இதனால் பாஜகவின் மரியாதைதான் ஒரே நாளில் தகர்ந்துபோயிருக்கிறது. என்று அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.எஸ். சிவசங்கர் கூறியுள்ளார்.
 

நக்கீரன் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி:-
 

பிரதமர் வருகைக்கு கருப்பு கொடி காட்டுவது சிறுபிள்ளைத்தனமானது. தமிழகத்தில் தற்போது நடப்பது தேச விரோத செயல்கள். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரை நேரில் சென்று வரவேற்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருக்கிறாரே?
 

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கருப்புக்கொடி காட்டுவது தவறு என்று எச். ராஜா கூறுகிறார். தமிழ் மக்களுக்கான உரிமைகளை, தமிழ் மக்களுக்கான உணர்வுகளை தெரிவிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார் ஸ்டாலின். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தாமதம் செய்து ஏமாற்றியதற்கு இந்த கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. இந்த கருப்பு கொடி போராட்டத்தை முதன் முதலில் அறிவித்தது திமுகதான். அதற்கு பிறகுதான் மற்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இந்த போராட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. அதுவும் சென்னை முழுவதும் கருப்பு என்ற அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது. கட்சி வேறுபாடு இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். 
 

அதேபோல் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  ''கோ பேக் மோடி'' (gobackmodi) என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது. கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் அதை பதிவு செய்ததால்தான் உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது. 
 

மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியால் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் என்று சொல்கிறார். அவர் வந்த நிகழ்ச்சியால் வேலை வாய்ப்பு ஏற்படுமா, ஏற்படாதா என்று மக்களுக்கு தெரியும். வேலை வாய்ப்பு தருவேன் என்றும், 15 லட்சம் பணத்தை தருவேன் என்றும் கடந்த 4 வருடமாக ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். எனவே இது ஏமாற்று வாதம். அவர் தமிழ்நாட்டுக்கு வரும்போது, தமிழ்நாட்டு பிரச்சனைக்காக கருப்பு கொடி காட்டுவதில் எந்த தவறும் இல்லை. இந்த போராட்டம் மக்கள் போராட்டம். தமிழகத்தின் குரலை இந்த போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறது. 
 

உலக அளவில் செல்வாக்கு பெற்றுள்ள மோடியை எதிர்க்கட்சிகள் சிறுமைப்படுத்த முடியாது. எதிர்க்கட்சியின் போராட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு இல்லை. எதிர்க்கட்சிகளுக்கு காவிரி நீர் பற்றி கவலையில்லை. மோடியை விமர்சிப்பதே நோக்கம். நேற்று நடந்த போராட்டத்தால் உலக அளவில் காங்கிரஸ், திமுகவுக்கு மரியாதையை குறைத்துள்ளது என்று தமிழிசை கூறியிருக்கிறாரே?
 

''கோ பேக் மோடி'' (gobackmodi) என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது. இது திட்டமிட்டு செய்யக்கூடிய விஷயம் அல்ல. ஏகோபித்த தமிழர்கள், இணையத்தில் புழங்குபவர்கள் தங்களது உணர்வை காட்டியதால்தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறது. வெறும் கட்சிக்காரர்கள் மட்டுமே காட்டியிருந்தால் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. இதுவரை மோடிக்குத்தான் இணையத்தில் செல்வாக்கு அதிகம் இருக்கிறது. ஆதரவு அதிகம் இருக்கிறது என்ற சூழல் மாறி மோடிக்கு எதிர்ப்பு இருக்கிறது என்று இன்று உலக அளவில் தெரிந்திருக்கிறது. எனவே அவர் உலக அளவில் சுற்றி ஆங்காங்கே ஒரு கருத்தை சொல்லி பெரிய செல்வாக்கு உள்ளதுபோல் கட்டமைப்பு செய்துகொண்டிருந்தது இப்போது ஒரே நாளில் மொத்தமாக தகர்ந்துபோயிருக்கிறது. 
 

அவருக்கான எதிர்ப்பு இவ்வளவு இருப்பது தெரிய வந்தததால் அவர் மீதுதான் தவறான கண்ணோட்டம் இந்திய மக்களிடத்திலும், உலக மக்களிடத்திலும் வருமேயொழிய எதிர்ப்பை காட்டியவர்கள் மீது வராது. எதிர்ப்பை ஏன் காட்டுகிறார்கள் என்றால் அந்த அளவிற்கு இந்த அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். ஒரு ஜனநாயக நாட்டில், ஜனநாயக ரீதியிலான போராட்டம். 
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று முதல்வரும், துணை முதல்வரும் பிரதமரிடம் மனு அளித்துள்ளார்கள். தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டிய செயல் தலைவர் ஸ்டாலினால் கர்நாடக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிந்ததா? ஆளுநரே தேவையில்லை என்று சொன்னவர்கள் தற்போது ஆளுநரை சந்திப்பது அரசியல் சந்தர்ப்பவாதம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறாரே?
 

காவிரி பிரச்சனையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுப்பதை அரசாங்கம் தட்டி கழித்த காரணத்தினால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் கூட்டினார். அவர் கூட்டிய கூட்டத்திற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் வருவதாக ஒப்புக்கொண்டனர். அதற்கு பிறகு அரசாங்கம் கண்விழித்து எங்கே எதிர்க்கட்சித் தலைவருக்கு பெயர் கிடைத்துவிடுமோ என்று நாங்களே கூட்டுகிறோம் என்று சொன்ன பிறகு, அதிலே கொஞ்சமும் ஈகோ பார்க்காமல் அரசாங்கம் கூட்டும் கூட்டத்திற்காக தான் கூட்டிய கூட்டத்தை ரத்து செய்தார். அரசாங்கம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் வெற்றி பெற வேண்டும், தமிழகத்திற்கு நன்மை பயக்க வேண்டும் என்பதால் அரசாங்கத்திற்கு துணையாக இருக்க அவர் தயங்கவே இல்லை. எனவே அதில் குறை சொல்வது என்பது ஜெயக்குமாரின் அறிவிலித்தனம்.
 

முதல் அமைச்சர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அதற்கு அவர்கள்தான் அவமானப்பட வேண்டும். காவிரி பிரச்சனையில் பிரதமரிடம் முதல் அமைச்சர் மனு கொடுத்ததாக ஜெயக்குமார் கூறுகிறார். எடப்பாடி பழனிசாமி எப்போது முதல் அமைச்சராக வந்தாரோ, அப்போதிலிருந்தே ஏதாவது ஒரு மனு கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால் அந்த மனுக்கள் பரிசீலனைக்கு வந்ததும் இல்லை. இந்த மனுவும் பரிசீலனைக்கு வரப்போவதும் இல்லை. 
 

மத்திய அரசாங்கத்தின் துணையோடு இந்த மெஜாரிட்டி இல்லாத அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டியிருப்பதால் தமிழக ஆட்சியாளர்கள் அடிமையாக இருக்கிறார்கள். தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கையில் இருக்கிறது. ஆகையால்தான் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் ஸ்டாலின் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றுதிரட்டி மத்திய அரசுக்கு தமிழகத்தின் உணர்வை பிரதிபலித்துக்கொண்டிருக்கிறார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.