Skip to main content

மதங்களை இழிவுபடுத்துவது எங்கள் நோக்கமல்ல!- காவல்நிலையத்தில் ஆஜராகாமல் ஜீயர் விளக்கம்! 

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

மத உணர்வுகளைப் பாதிக்கும் விதத்தில் பேசியதாக காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட செயலாளர் சையது இப்ராஹிம் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீமணவாள மாமுனிகள் ஜீயர் சுவாமி மடத்தின் 24-வது பீடம் சடகோப ராமானுஜருக்கு, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் உத்தரவிட்டதன் பேரில் வரும் 22-ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல் நிலையம்.  
 
தற்போது விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில இளைஞரணி அமைப்பாளர் சரவண கார்த்திக் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல்நிலையத்தில் சடகோப ராமானுஜர் எழுதிய விளக்கக் கடித்தத்தை, ஜீயர் சார்பில் கொடுத்திருக்கிறார். அந்த கடிதத்தில் தேதி எதுவும் குறிப்பிடாமல் தனது லெட்டர் பேடில் கையெழுத்துக்குப் பதிலாக இடதுகைப் பெருவிரல் ரேகை வைத்து  ஜீயர் அளித்திருக்கும் கடிதத்தின் விபரம் இதோ -      

 

srivillipudhur sadakopa ramanujar write letter for same place down police station

 


 
25-7-2019 அன்று சையத் அலி என்பவர் தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவில் என் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நான் 22-7-2019 அன்று காஞ்சிபுரம் ஸ்ரீஅத்திவரதர் சம்பந்தமாக பேட்டி ஒன்றை தொலைக்காட்சிகளுக்கு கொடுத்தேன். அந்தப் பேட்டியில் 1600-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் முகலாயர் படையெடுப்பின் ஸ்ரீஅத்திவரதரைப் பாதுகாக்க குளத்தில் வைக்கப்பட்டார் எனவும், அது இப்போது தேவையில்லை. ஆகவே, ஸ்ரீஅத்திவரதரை மீண்டும் மக்கள் தரிசனத்திற்கு வெளியே வைக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால், தொலைக்காட்சியில் என் முழுக்கருத்தையும் பதிவு செய்யாமல், குறிப்பிட்ட கருத்தை மட்டும் எடுத்து ஒரு மதத்தை கூறியதை எழுதியுள்ளனர் மற்றும் காட்சிப்படுத்தியுள்ளனர். ஆனால், என் கருத்தானது திருவரங்கன் உலா, மதுரா விஜயம் என்கின்ற புத்தகத்திலும் எழுதப்பட்டுள்ளது. மேலும், துண்டுப்பிரசுரமாகவும் வந்துள்ளது. மேலும், அந்த துண்டுப்பிரசுரத்தில் உள்ளதையும் இத்துடன் இணைத்துள்ளேன். மேலும், என் நோக்கம் எந்த இடத்திலும் எந்த மதங்களையும் இழிவுபடுத்துவது, பேசுவது எங்கள் நோக்கமல்ல என்பதையும் இதன்மூலம் தெரியப்படுத்திகொள்கிறேன். மேலும், தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் என் முழுக்கருத்துக்களை பதிவிடவும் இல்லை. தேவைப்பட்டால் மேற்குறிப்பிட்ட புத்தகங்களை ஆதாரமாகவும் கொடுப்போம் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். ஜெய் ஸ்ரீமந்நாராயணா.

 

 

srivillipudhur sadakopa ramanujar write letter for same place down police station


 

 
அமைச்சர்களே, ’தமிழகத்தில் நடப்பது ஆன்மிக ஆட்சிதான்’என்கிறார்கள். ஜீயர் என்ன சாமானியரா? சடகோப ராமானுஜர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றெல்லாம் தமிழக காவல்துறை கறார் காட்டவா போகிறது? ஜீயர்கள் யாரும் கையெழுத்திடக் கூடாதாம். கைரேகைதான் வைக்க வேண்டுமாம். ஜீயர்கள் கடைப்பிடித்துவரும் ஆன்மிக சம்பிரதாயத்தில் மிக உறுதியாக இருக்கும் சடகோப ராமானுஜருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை யார் எடுத்துச்சொல்வது?     




 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.