Skip to main content

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு -தனிமைபடுத்தும் முகாமுக்கு ஸ்ரீரங்கவாசிகள் எதிர்ப்பு!

Published on 23/06/2020 | Edited on 23/06/2020

 


திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள மூலத்தோப்பு என்கிற இடத்தில் கரோனோ பாதிப்பு ஏற்பட்டு அங்கிருந்து இதுவரை 5 பேருக்கு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில் ஸ்ரீரங்கம் கீழ சித்திர வீதியில் உள்ள  ராஜன் மாநகராட்சி பள்ளியில் கரோனொ நோயாளிகளை கொண்டு வருவதற்கான மாநகராட்சி அதிகாரிகளை வைத்த சுத்தம் செய்து வருகிறார்கள். ஆனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 


இது குறித்து அந்த பகுதி மக்களிடம் பேசியபோது, ஸ்ரீரங்கம் கீழ சித்திர வீதியில் 200 வீடுகள் உள்ளன. 10,000 பேருக்கு மேல் இருக்கிறார்கள். இங்கு தற்போது இந்த பள்ளியில் 400 கரோனோ நோயாளிகளை கொண்டு வந்து தனிமைப்படுத்துவதற்காக முயற்சி செய்து வருகிறார்கள். ஏற்கனவே கரோனோ பரவி வரும் இந்த நிலையில் அருகே தனிமைபடுத்தும் மையத்தை ஏற்படுத்தினால் எப்படி சரியாக இருக்கும்.


ஸ்ரீரங்கம் மேலூர் மூலத்தோப்பு பகுதியில் ஏழு பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது கரோனா வந்த வீட்டின் முன்பு பெயருக்கு பேரிகாட் வைத்து அதன் சுற்றி கட்டைகளை மட்டுமே வைத்துள்ளனா். இப்பகுதியில் கரோனா வந்துள்ளது என அங்கு வசிக்கும் மக்களுக்கே தெரியவில்லை. ஆகையால் முதலில் தண்டோரா மூலமாகவோ அல்லது மைக் மூலகாகவோ உஷார் அறிவுப்புகளை அறிவிக்க வேண்டும்.


மூலத்தோப்பு பகுதி முழுவதும் பேரிகாட் வைத்து சீல் வைக்க வேண்டும். அங்கு வசிக்கும் மக்களுக்கு பாஸ் கொடுத்து வேலைக்கு செல்ல மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் வெளியே வர அறிவுறுத்த வேண்டும். மேலும் அங்கு வசிக்கும் அனைத்து மக்களுக்கு உடனடியாக கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். வருமுன் காப்பதே காலச்சிறந்தது. சென்னையை போன்று திருச்சியும் உருவாகாமல் இருக்க திருச்சி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


இதற்கு இடையில் ராஜன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் உள்ள ஐய்யனார் உயர்நிலைபள்ளியில் கரோனோ வார்டு தனிமைபடுத்தும் முகாம்களை ஏற்படுத்தி வருகிறார்கள் ஸ்ரீரங்கம் மாநகராட்சி அதிகாரிகள்!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'என் மகராணி என்னைய விட்டு போறியேடா...'-திருச்சியை அதிர வைத்த சம்பவம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
nn

திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை தொடங்கி இருக்கும் நிலையில் இது கொலைச் சம்பவம் என  சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு 19 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் இருந்தார். பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்த ஜெயஸ்ரீ அதே ஸ்ரீரங்கம் வடக்கு சித்திர வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் கிஷோரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரின் காதலும் இரு தரப்பு வீட்டுக்கும் தெரியும் என்றும் சொல்லப்படுகிறது.

ஸ்ரீராம் என்ற நண்பரின் வீட்டின் மாடியில் மாலை வேளையில் ஜெயஸ்ரீ கிஷோர் சந்தித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஸ்ரீராமின் நண்பர்கள் தீபக், ராகுல், ரிஷிகேஷ் ஆகியோரும் மொட்டை மாடியில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயஸ்ரீ கிஷோர் வழக்கம்போல் ஸ்ரீராம் வீட்டின் மாடியில் பேசிக் கொண்டிருந்த பொழுது, திடீரென தவறி விழுந்த ஜெயஸ்ரீக்கு ரத்த காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் கிஷோர், ஸ்ரீராம் ஆகியோர் அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பின் தலையில் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜெயஸ்ரீ திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். திருமணம் செய்து கொள்ளலாம் என ஜெயஸ்ரீ கிஷோரிடம் கூறியதாகவும் ஆனால் தற்பொழுது திருமணம் வேண்டாம் என கிஷோர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அருகில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை கைகளாலே கிஷோர் உடைத்துள்ளார். இதனால் அவருடைய கைகளில் ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பக்கத்தில் இருந்த  ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் சிறிது நேரத்தில் ஜெயஸ்ரீ மாடியிலிருந்து தவறி விழுந்ததாக கூறி அவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ஜெயஸ்ரீயை மருத்துவர்கள் பரிசோதித்து அவர் உயிரிழந்ததை தெரிவித்ததும் உடன் வந்த கிஷோர் உள்ளிட்ட அத்தனை பேரும் தப்பித்து ஓடி தலைமறைவாகினர். உண்மையாக ஜெயஸ்ரீ தவறிவிழுந்து உயிரிழந்தால் ஏன் நண்பர்கள் அனைவரும் தலைமறைவாக வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.

இது தொடர்பாக போலீசார் தேர்தல் வேட்டை நடத்திய நிலையில் கரியமாணிக்கம் பகுதியில்  உள்ள ஸ்ரீகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் ஐந்து பேரும் தலைமறைவாகி இருந்தது தெரிய வந்தது. 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அடைக்கலம் தந்த ஸ்ரீ கிருஷ்ணனையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை சென்று கொண்டிருக்கிறது.

கிஷோர் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் கிஷோர் அந்த பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் தந்தையிடம் ஜெயஸ்ரீயின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது கண்ணீர் விட்டு கதறி அழுத அவரது தந்தை, ''அப்பா உனக்கு என்ன பாவம் செய்தேன்... என் மகராணி என்னைய விட்டு போறியேடா... நான் என்ன பாவம் செஞ்ச... கொன்னுட்டாங்களே பாவிங்க எல்லாம்... யாருக்காகவோ உன்னை இழந்துட்டியேடா...'' என்று கதறி அழுதது நெஞ்சை உறைய வைத்தது.

 

Next Story

பலகோடி ரூபாய் சொத்துகளை அபகரிக்க முயற்சி; ஜீயர் பரபரப்பு புகார்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Jeeyar sensational complaint of trying to expropriate multi-crore property of Srirangam Falahari Mutt

ஸ்ரீரங்கம் பலஹாரி மடத்தின் பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அபகரிக்க முயற்சி நடைபெறுவதாக, அந்த மடத்தின் ஜீயர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் ஸ்ரீபலஹாரி புருஷோத்தம ஜீயர் மடம் உள்ளது. இந்த மடத்தின் 6-வது ஜீயர் பராங்குச புருசோத்தம ராமானுஜ ஜீயர்(42), வழக்கறிஞர் ஸ்ரீராமுடன் திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினியிடம் நேற்று அளித்த புகார் மனுவில், ஏறத்தாழ 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் பலஹாரி புருஷோத்தம ஜீயர் மடத்துக்கு ரூ.500 கோடிக்கும் மேல் அசையா சொத்துகள் உள்ளன. 

உள்ளூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களின் தொல்லை தாங்க முடியாமல், இதற்கு முன்பு ஜீயராக இருந்தவர் 2010-ல் தலைமறைவாகிவிட்டார். 2022-ல் மடத்தின் 6-வது ஜீயராக நான் நியமிக்கப்பட்டேன். அப்போது மடத்தின் வரவு-செலவு கணக்குகளை சரி பார்த்தபோது, மடத்துக்குச் சொந்தமான சில இடங்களை 3-வது நபர்கள் மூலம் அபகரித்தது தெரியவந்தது.

மேலும், மடத்துக்குச் சொந்தமான சொத்துகளை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கில் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த லாட்ஜ் உரிமையாளர் ஒருவர், என்னைத் தொடர்ந்து மிரட்டி வருகிறார். அவரது மோசடிகளுக்கு, ஏற்கெனவே மடத்தில் பணிபுரிந்து வந்த ஒருவர் உள்ளிட்ட 7 பேர் உடந்தையாக உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.